பேசறீங்க?”என்று கேட்டார்
“ என் பேர் தனலஷ்மி.........” அவள் பேசிக்கொண்டே இருக்கும் போது மேனேஜரை போக சொன்னார்.
"நீங்க நேரில வந்தா இன்னும் விவரமா பேசலாம், வறீங்களா?”
"இப்ப உடனே வறேன் சார், உங்க அட்ரஸ் கொடுக்கறீங்களா?”
அவர் அட்ரஸ் சொல்ல அவள் எழுதிக் கொண்டாள்.
“இன்னும் ஒரு அரை மணிநேரத்தில அங்க இருப்பேன் சார்." எனறாள்.
அவர் கை காலெல்லாம் பட படவென அடித்துக் கொண்டது, உடனே தன் மனைவி நிக்கத்துக்கு போன் செய்து அவருக்கு சுருக்கமாக விஷயத்தை கூறி உடனே கிளம்பி தன் ஆஃபீசுக்கு வரச் சொன்னார்.
சிறிது நேரத்தில் நிக்கத் அவர்களின் ஆஃபீசுக்கு வந்தார். மேனேஜா் அவரை விஷ் செய்து ரூம் வரை கொண்டு விட்டு வந்தான்.
ஜாஃபா், தன் மேனஜரிடம் " தனலஷ்மின்னு ஒரு லேடி வருவாங்க அவங்களை உடனே உள்ள அனுப்பு!" என்று கூறிவிட்டு அவர்கள் இருவரும் அவளுக்காக காத்திருந்தாா்கள்.
சிறிது நேரத்தில் மேனஜர் கதவைத் திறந்து விட உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணை நிமிர்ந்துப் பார்த்தனர். நல்ல உயரம், நல்ல நிறம், அடக்கமான பெண் என்பது முகத்திலேயே தெரிந்தது.
" உள்ள வாம்மா, என் பேர் நிக்கத். இவர் தான் ஜாஃபா்."
"வணக்கம் சார் , வணக்கம் மேடம்!"
இந்த சார், மேடம்லாம்,, வேண்டாம். அங்கிள் ,ஆன்டின்னே கூப்பிடு!" என்றார் நிக்கத்.
"சாி ஆன்டி!" என்று கூறி, அவர்களிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
ஜாஃபர் தன்னை அறிமுகப் படுத்தி கொண்டார்
பிறகு தான் வந்த விஷயத்தை பேசினாள் கண்களில் கண்ணீர் கொட்டியது, நிக்கத், அவளுக்கு ஆறுதலாக அவள் கையைத் தடவிக்கொடுத்தார்.
அஜய் தன்னிடம் எப்படி வந்து சேர்ந்தான், அவனை ஒரு பாடகனாக்கியது, படிப்பில் அவனுக்கிருக்கும் ஆர்வம் என்று எல்லாவற்றையும் கூறினார். இப்போது தான் வாங்கியிருக்கும் வீட்டை பற்றியும் அது அவன் சம்பாதித்ததில் வாங்கியது என்றும் கூறினார்.
" ரொம்ப நன்றி அங்கிள் ஆண்டி, நீங்க இல்லைன்னா அவன் நிலைமை என்னவாயிருக்கும் என்று என்னால் நினைத்து பார்க்க கூட முடியல்ல. "
"சாி நான் ஒன்று கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டியே?"
“ஐயோ! இல்லை ஆன்டி!”