முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான் முகில்ன்.
நேத்திக்கு எங்க வீட்டுக்கு என் காலேஜ் ஃப்ரெண்ட் வத்சலாவோட அக்கா...அவங்க பேரு மல்லிகா...அவங்க எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க!..”
“ஓ...அவங்க உனக்கும் ஃபிரெண்டா?” முகிலன் கேட்க
“ஆமாம்...நாங்க எப்பக் கிளாஸ் கட்டடிச்சாலும் அந்த வத்சலா வீட்டுலதான் போய்க் குதியாட்டம் போடுவோம்!...அதனால எங்க ஃபிரெண்ட்ஸுக எல்லாருக்குமே அந்த வத்சலா அக்காவை நல்லாத் தெரியும்!”
“ம்ம்ம்...மேல சொல்லு!”
“ஆக்சுவலா அவங்க எதுக்கு எங்க வீட்டுக்கு வந்தாங்கன்னா?...எங்க வீட்டுல இருந்து நாலு வீடு தள்ளியிருக்கற ஒரு வீட்டுக்குத்தான் அவங்க குடி வரப் போறாங்களாம்!”
“இதுல என்ன சுவாரஸியம்?..இதை எதுக்கு எனக்குச் சொல்லணும்?...போ... ராதிகா வர வர நீ ரொம்பவே போரடிக்கறே!” முகிலன் சலித்துக் கொள்ள
சட்டென்று கோபமான ராதிகா
“யோவ்...இனிமேதான்யா நான் அந்த முக்கிய கட்டத்துக்கே வரப் போறேன்?...அதுக்குள்ளார இப்படி பறந்தேன்னா எப்படிய்யா?”
“சரி...சரி...சொல்லு!”
“அவங்க முந்தி குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டை விட்டுட்டு இங்கே குடி வரப் போறாங்க!ன்னு தெரிஞ்சதும் நான் கேட்டேன் “ஏங்க...அப்பார்ட்மெண்ட் லைஃப் போரடிச்சிடுச்சா?”ன்னு! அதுக்கு அவங்க சொன்ன பதிலைக் கேட்டதும் நான் ஆடிப் போயிட்டேன்!” விழிகளை விரித்துக் கொண்டு முகத்தில் ஒரு திகிலைச் சுமந்து கொண்டு ராதிகா சொல்ல
“அப்படி என்ன பதில் சொன்னாங்க?”
“அந்த அப்பார்ட்மெண்ட்ல பேய் இருக்காம்!...அதோட சேட்டையைத் தாங்க முடியாமத்தான் இவங்க வீடே மாத்தறாங்களாம்!”
“ஆஹா...இது நம்ம சப்ஜெக்ட் ஆச்சே?” ஆர்வமானான் முகிலன்.
“ஆமாம் முகி...அவங்க சொன்ன ரெண்டொரு இன்ஸிடெண்ட்களைப் பார்க்கும் போது...எனக்கே கூட அங்க உண்மையிலேயே பேய் இருக்கோ?ன்னு தோணுது!”
“இஸிட்?”
“ஆமாம் முகி...அவங்களுக்கு ஒரே பையன்...குட்டிப் பையன்...எல்.கே.ஜி.படிக்கறான்!...அவன் கிட்டே அவங்க பேசும் போதெல்லாம் அவன் தன்னோட தாயின் முகத்தைப் பார்க்காமல் அவளுக்குப் பின்னால் எதையோ பார்த்தபடிதான்