போய்விட்டாள்.
ஆபிசுக்குப் போனவுடன் முதல் காரியமாக தன் மானஜர் முரளியை பார்க்க அவர் ரூமுக்குச் சென்றாள்.
கதவை தட்டி காத்திருந்தாள், "கம் இன்!" என்ற குரலைக் கேட்டவுடன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
"என்ன தனலட்சுமி எப்படி இருக்கீங்க?"
"சார் ரொம்ப தேங்க்ஸ் சார், அஜயை பார்த்துவிட்டேன், அவனோடு தான் இனிமே இருக்க போறேன், என் உடம்பில் உயிர் உள்ள வரை, நான் உங்க உதவியை மறக்க மாட்டேன்!"
" என்ன தனலட்சுமி இது, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க? நீங்க சந்தோஷமா இருக்கீங்க இல்ல, இனி நிம்மதியாய் வேலையை பாருங்க, இனி மனசு வருத்தப் படாதீங்க! "
"சரி சார், நான் என் காபினுக்குப் போறேன்!"
சரிம்மா, அப்புறம் அந்த ப்ராஜெக்ட்ல ஏதோ ப்ராப்ளேம்னு உங்க டீம்ல சேது சொன்னார், அது என்னன்னு கொஞ்சம் பாருங்க மேடம்."
"கண்டிப்பா சார்!" என்று அவள் காபினுக்குப் போனாள், கதவு தட்டப் பட "உள்ள வாங்க சேது!" என்றாள்.
" எப்படி மேடம் நான்தான் என்று தெரியும்?"
"அதுவா, இப்பத்தான் முரளி சார் சொன்னார் நீங்க ஏதோ பிராப்ளம்னு சொன்னீங்கன்னு, " என்று கூறினாள்.
"என்ன ப்ராப்ளம் சேது?"
அவன் என்ன பிராப்ளம் என்று கூறினான். தன் கம்புயுடரை திறந்தாள், அது கனக்ட் ஆனவுடன், அந்த மெசேஜை பார்த்தாள், அதற்கு வேண்டிய திருத்தங்கள் செய்ய சில கம்மாண்ட்ஸ் கொடுத்தாள் அதை என்ன திருத்தம் செய்தேன், என்றும் சேதுவிடம் எடுத்துரைத்தாள்.
" ஓ! ரொம்ப ஈஸியா சரி செய்துட்டீங்க மாம், நாங்க போட்டு குடைந்துகிட்டோம். தேங்க்ஸ் மாம்," என்று கிளம்பினான்.
"வர செவ்வாய் கிழமை ரிலீஸ், அதுக்குள்ளே ரெடி பண்ணிடுங்க, எனி டவுட்ஸ் ப்ளீஸ் என்னை வந்து கேளுங்க."
" சுயூர் மாம்!" அவன் கதவை மூடிவிட்டு சென்றான்.
அவள் மத்த டீம் வேலையில் மூழ்கினாள்.
மாலை மணி ஆறு ஆயிற்று, மற்ற நாட்களாய் இருந்தால் ,அவள் அங்கேயே இருந்து வேலையில் மூழ்கிவிடுவாள்.