பணத்துல வாங்கியது, மேலே கொஞ்சம் கடன் வாங்கியிருக்கு. ஆனால் நீ இன்னும் சம்பாதிக்க போற. அதிலே எல்லாம் கொடுத்திடலாம், இனிமேதான் அம்மா வந்தாச்சே அவங்க கிட்ட எல்லா கணக்கையும் பேசிடறேன், நீ இன்னும் பெரியவனானவுடன் உங்க அம்மா எல்லாத்தையும் சொல்லுவாங்க உனக்கு. "
" ஐயோ மாஸ்டர், இவ்வளவு பெரிய வீடு வாங்கற அளவுக்கு நான் என்ன சம்பாரிச்சேன், நீங்கதானே எனக்கு எல்லாம் செய்யறீங்க!"
" நீ இன்னும் சின்ன பையன்டா அதான் உனக்கு ஒன்னும் புரியல. இன்னும் கொஞ்சம் வயதானா உனக்கு எல்லாம் புரியும், கவலைப் படாதே. "
தனத்துக்கு பெருமையாக இருந்தாலும், இந்தக் குழந்தையை இப்படி கஷ்டப் பட வைத்து விட்டேனே, ' என்று தன்னை நொந்துக் கொண்டாள்.
" அங்கிள் நீங்க எனக்கு ஒன்னும் கணக்கு கொடுக்க வேண்டாம். நான் இன்று வந்தவள், நீங்க தான் அவனை இந்த அளவுக்கு ஆளாக்கி கொண்டு வந்திருக்கீங்க, நீங்க என்ன பண்ணாலும் அவன் நன்மைக்குத்தான் இருக்கும். அதனால கணக்கு கொடுக்கிறேன்னு எங்களை பிரிச்சு வைக்காதீங்க, உங்க ரெண்டு பேரையும் நான் என் அம்மா அப்பாவாத்தான் நினைக்கிறேன்! " என்றாள்.
" தெரியும்மா நாங்களும், அஜயை எங்க பேரன்னாத்தான் நினைக்கிறோம். என்னை தாத்தான்னுதான் கூப்பிட மாட்டேன்றான், நிக்கத்த மட்டும் பாட்டிம்மான்றான், என்ன இன்னும் மாச்டருன்னுதான் கூப்பிடறான், நீயே கொஞ்சம் சொல்லு அவன்கிட்ட. "
அவள் சிரித்துக் கொண்டே "ஏன் அஜய், ஏன் அங்கிள தாத்தான்னு கூப்பிடமாட்டேன்ற?"
" அது என்ன வளத்த எங்க மாஸ்டர் நினைப்புலத்தான் அப்படி கூப்பிடறேன். அவரு எங்கள பிச்சை எடுக்க வச்சாலும் எங்கள அவரோட வச்சிருந்தாரு அதான்.
இவரும் எங்களுக்கு எல்லாம் செய்யறாரில்லை, அதான் இவரையும் அந்த மாஸ்டர கூட்ட மாதிரி கூப்படறேன், தப்பா நினைக்காதீங்க மாஸ்டர்."
நைசாக தனம் அந்த இடத்தை விட்டு இன்னொரு ரூமுக்கு போய் கதவை போட்டு விட்டு அழுதாள், என் குழந்தையை நான் எப்படியெல்லாம் கஷ்டப் பட வைத்திருக்கிறேன், ஐயோ யாரோ எடுத்து எப்படியெல்லாமோ வளர்த்திருக்கிறார்கள், இப்போது இவன் பேரோடும் புகழோடும் வளர்கிறான் ஆனால் நான் ஒன்றுமே செய்யவில்லையே, என் மகனை அனாதையாக விட்டுவிட்டேனே, என்று மனம் வருந்தினாள்,கதறினாள்.
"சரி சரி நீ கவலைப் படாதே, உனக்கு எப்போ என்னை தாத்தான்னு கூப்பிடத் தோணுதோ அப்போ கூப்பிடு போரும்!" என்றார் ஜாபர்.
" வாங்க எல்லோரும் ஹாலுக்கு போகலாம், " என்று கூட்டிக்கொண்டு வந்தார் நிக்கத்.