“இத பாரு தனம், நீ என் மக, அஜய் எங்க பேரன், இனிமே நீ எதுக்கும் கவலைப் படாதே, புரிஞ்சுதா? இப்ப வா போகலாம்!" என்று அவளை கூட்டிக் கொண்டு போனார் நிக்கத்.
கேக்கை டைனிங் ரூமில் ரெடி செய்திருந்தார்கள் ஜாபரும், செல்வமும், சுமதியும். ஜாபர், ஹோட்டலில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டார், அதுவும் வந்துவிட்டது. அவர் மனதில் அபுவையும் கூப்பிட்டிருக்கலாமோ என்று தோன்றியது, அவன் மட்டும் இங்கு இல்லையே என்றிருந்தது, நிக்கத்தும், தனமும் வருவதை பார்த்தார் ஜாபர்.
குழந்தைகள் எல்லாம் ஒரு ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள், " வீடு எவ்வளவு அழகா இருக்குடா!" என்று தினேஷ் சொல்ல,
"ஆமாண்டா அஜய், ரொம்ப நன்னாயிருக்குடா!" என்றான் மகேஷ்
"ஒரு டிவி மட்டும் இருந்தா நன்னாயிருக்கும்." என்றான் ராஜேஷ்.
இவர்கள் எல்லோருக்கும் இங்கு வந்த பிறகு ஜாபர்தான், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்த பெயரை கேட்டு அவர்களுக்கு அந்தப் பெயரையே சூட்டினார், பெயர் மட்டும் இல்லை ஒவ்வொருவருக்கும் ஒரு பர்த் செர்டிபிகேட்டும் ரெடி செய்தார், அவர்கள் எல்லோரையும் ஸ்கூலில் சேர்த்தார், தானே எலோருக்கும் கார்டியனாக இருந்து அவர்களை நல் வழி நடத்தினார். அவருக்கு பக்க பலமாக நிக்கத் இருந்து நடத்தினார்.
"அஜய், உன் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு வா! " என்று குரல் கொடுத்தார் நிக்கத் .
"இதோ வரேன் பாட்டிம்மா!" என்று மறு குரல் கொடுத்து " ஏய் வாங்கடா, பாட்டிம்மா கூப்பட்றாங்க!" என்று ஓடினான், அவனைத் தொடர்ந்து மற்ற குழந்தைகளும் ஓடினார்கள். எல்லாம் விடலை பருவ வயதை அடைந்துக் கொண்டிருந்தார்கள்.
சிலர் அஜய் வயதிலும், சிலர் ஒரு வயது குறைவாகவும் அவரவர் உயரத்தையும் வளர்தியையும் வைத்து, அவர்கள் வயதை தோராயமாக கொடுத்திருந்தார் அவர்கள் யாருக்கும் அவர்கள் பிறந்த நாள் வருடம் என்று எதுவும் தெரியாது.
அவர்கள் அங்கு வந்த போது அங்கு வைத்திருந்த கேக்கை பார்த்து அதிசயித்தார்கள், ஒவ்வொரு வருடமும் பெரிதாக இல்லாவிட்டாலும், பிறந்த நாள் கொண்டாடுவார்கள். இந்த வருடம் அஜய்க்கு பெரிய கேக் வாங்கி வீடெல்லாம் வண்ண விளக்குகளும், வண்ண பூக்களும் கொண்டு டெகரட் செய்திருந்தார்கள் நிக்கத்தும், ஜாபரும்.
நிக்கத், கத்தியை அஜயிடம் கொடுத்தார், " அஜய், நீயும், உன் அம்மாவும் ஒன்றாக வெட்டவேண்டும், இதுக்கு ரொம்ப கொடுத்து வைத்திருக்கனும் அஜய், இனி ஒவ்வொரு வருடமும் இப்படியே நீங்க கொண்டாடனும்னு நான் அல்லாவை துவா கேக்கறேன். "
'தேங்க்ஸ் பாட்டிம்மா, ஒவ்வொரு வருடமும் நீங்களும் மாஸ்டரும், இப்படி வந்து எங்களோட