பண்ணிட்டாம்மா!" வள்ளிதான் அவளுடைய வாய் துடுக்கை அங்கே கான்பித்தாள்.
"சும்மா இருடி இப்போதைக்கு காரியம் ஆகணும், உங்க ரெண்டு பேர் கல்யாணம் நல்லபடி ஆகணும் அவளுடைய உதவி இப்போது வேணும் சும்மா இரு !"
"அது சரி, உங்களை மாதிரி பெத்தவங்க இருந்தா நாங்க இப்படித்தான எல்லார்கிட்டயும் ஏச்சு பேச்சு வாங்கனும்!"
வள்ளி விடாமல் அவள் அம்மாவிடம் கூறினாள் .
“வள்ளி சும்மாயிருடி இப்ப காரியமாகனும் நமக்கு, சென்னைக்கு போய் உங்க கல்யாணத்துக்கு வரன் பாக்கணும், உங்க கல்யாணத்த முடிக்கணும், அதனால வாய மூடு. "
"அம்மா என்னம்மா இது, அக்கா நமக்கு நல்லது தான செய்யறேன்றா, அப்புறம் என்னம்மா அக்கா சொல்றத கேளும்மா, அதுதான் நல்லது." பார்வதி கூறினாள்.
"ஏய் சும்மா இரு பாரு, நீ பெரிய இவளாட்டம் உனக்கு உலகம் புரியாதுடி ,பாரு, நீ சும்மாயிரு."
"எனக்கு உலகம் புரியலேன்னா பரவாயில்ல வள்ளி, ஆனா அக்கா என்ன சொல்ல வரான்னு புரியுது, நினைச்சு பார் அவங்க படிப்பை அவங்களே கஷ்டப் பட்டு படிச்சு அவங்களே வேலையை தேடி, அவங்களே அவங்க பெத்த பிள்ளையையும் தேடி இப்போ சந்தோஷமா வாழறாங்க, அவங்ககிட்ட போய் நம்ம கல்யாணத்துக்கு நீயே எல்லாம் செய்யுன்னு சொல்றது ரொம்ப தப்பு! "
"நீ பெரிய இவ போடி!"
"அம்மா என்னோட முடிவு அக்கா என்ன சொல்றாளோ அதை கேளு, அவ்வளவுதான்!"
"எனக்கு இஷ்டமில்லை அவ்வளவுதான் இனி உன் இஷ்டம் ." வள்ளிதான் இப்படி பேசியது.
"எப்படியும் நானும் அப்பாவும் முடிவு பண்ணிட்டோம், அவளுக்கே இந்த வீட்டை கொடுத்திடறதுன்னு, அவளுக்கு நான் பண்ண துரோகம்தான் அவளை இப்படி கல்லாட்டும் ஆக்கிட்டுச்சு இல்லேன்னா அவளுக்கு நம்ம மேலெல்லாம் எவ்வளவு பாசம் தெரியுமா? அவ இந்த குடும்பத்துக்கு காய்கறி பழம் தோட்டம்வளர்த்து அதை வித்து சம்பாரிச்சு வீட்டு செலவுக்கு கொடுத்தாள் அதுவும் அவ சின்ன பெண்ணா எட்டு ஒன்பதாவது படிச்ச காலத்திலேயே செய்தாள், அவள் செய்த தப்பு எல்லாம் அவள் தெரியாமல் அந்த குழந்தையை பெத்ததுதான். அதை நான் எடுத்து சாவடிச்சுடுன்னு அந்த மருத்துவச்சிகிட்ட கொடுத்ததுதான், அந்த பாவத்திற்கு அவளுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கேன், உங்களுக்காவது கல்யாணமாயிடும் அவளை யார் கல்யாணம் செய்துப்பாங்க?"
"ஏன் அதான் நல்லா சம்பாரிக்கிறாளே? அப்புறம் என்ன?அவ செய்ஞ்ச தப்புக்கு அவளுக்கு கல்யாணமாகாது அதுக்கு யார் என்ன செய்ய முடியும்? அதுக்கு நம்ம வீடு வேனுமாமா