"ஓஹ் !சர்ப்ரைஸ், ஐ காண்ட் வெயிட் பார் இட், எத்தனை மணிக்கு எங்க?"
"உனக்கு டெக்ஸ்ட் பன்றேன் சீக்கிரம் வந்துடு! " அவள் பேசி முடிச்சதும் .
"யார் அஜயா?" என்று அப்துல் கேட்டான்
"ஆமாம் அஜய்தான், சரி நீ வரியா நாம லன்ச் ஒண்ணா சாப்பிடலாம் ?"
"நீ ஆர்டர் போடு, நான் என்ன வேண்ணா செய்வேன், இனி உன்னை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது தனம்."
"சரி, அத பத்தி அப்புறம் பேசலாம், இப்போ அஜய்ய பார்க்க போலாம், அவனும் உன்ன பார்த்தா சந்தோஷப் படுவான்."
"அவன் சந்தோஷ படுவான், ஆனா எனக்கு குற்ற உணர்ச்சியாய் இருக்கும் தனம், வெட்கமேயில்லாம சின்ன வயசுல தப்பு பண்ணிட்டு உன் வயத்துல ஒரு பிள்ளையை கொடுத்து, அத அனாதையா பிச்சை எடுக்க விட்டுட்டு, ஒரு நல்ல ஆண்மகனுக்கு அழகா இதெல்லாம் சே.... சே ......
அவன் முகத்தை எப்படி பார்ப்பேன் நான்?" என்று வருத்தப் பட்டான்.
"அந்த வெட்கமில்லாத தப்ப நானும்தான் பண்ணேன், அதற்கு பிறகும் நானும் அஜயை பார்த்தேன், நான் தான் அவனை பெத்து அனாதையா பிச்சை எடுக்க வைத்தேன், சின்ன வயசுதான் உனக்கு அப்போ, ஆனா உனக்கு தெரியவே தெரியாது, நான் உன் குழந்தையை பெத்தது கூட உனக்கு தெரியாதே, அதனால நீ கவலப் படாத வா அவனை நீ பார்க்கணும், அவன் எவ்வளவு சந்தோஷப் படுவான் தெரியுமா?"
"கண்டிப்பா வரேன், எனக்கும் அவனை பார்க்கணும் ."
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜாஃபர் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார், தன் மேனேஜரை வெளியேவே இருக்க சொல்லி விட்டார். கதவை தட்டும்போதே அவன் அணைப்பிலிருந்து தள்ளி உட்கார்ந்தாள்.
"வாப்பா, க்கும்..." என்று தான் தொண்டையை சரி படுத்திக் கொண்டான் அப்துல் .
“வாப்பா, தனம் வந்து....."
"எதுக்குப்பா நீ கஷ்டப் படற, எனக்கு முன்னேயே தெரியும்பா !"
அவர்கள் ரெண்டு பேருக்குமே ஆச்சர்யம் "என்ன உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?"
"ஆமாம், எனக்கு ஏற்கனவே தெரியும்."
"எப்படி அங்கிள், என்கிட்ட தெரிஞ்ச மாதியே காட்டிக்கலியே, இதுவரை ஒன்னும் கேட்கவோ, சொல்லவுமில்லையே அங்கிள்."
"ஆமாம் வாப்பா என்கிட்டயும் அத பத்தி கேக்கல?"