காதை பொத்திக் கொண்டாள் தனம், சிரித்துக் கொண்டே .
"கத்தி முடிச்சாச்சா?"
"என் அம்மாவுக்கு புதுசு புதுசா எல்லாம் தெரியுது? என்னம்மா புது கல்யாண ஜோரா ?"
"ஹேய் போடா, நீ கூடத்தான் உங்கப்பாவை பார்த்தவுடன் புதுசு புதுசா பேச்செல்லாம் வருது, பயங்கரமான ஆளாயிட்ட?"
"எல்லாம் சகவாச தோஷம்."
"ஹஹ அம்மா, உனக்கும் அதே சகவாச தோஷம்னு நினைக்கறேன்."
"ஹேய் ரெண்டு பேரும், சகவாச தோஷம்னு சொல்லி என்ன வில்லன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க அம்மாவும், மகனும்?"
"ஹலோ ஹீரோ சார் இங்கயே ரோட்டுலியே இருக்க போறீங்களா? வீட்டுக்கு போகலாமா?"
"என் பீவி வீட்டுக்கு போலாம்னுட்டாப்பா? ரைட் ரைட் போகலாமா?"
"ரைட் ரைட் போலாம், போப்பா சீக்கிரம்."
"போதும் போதும் அப்பாவும் மகனும் அடிக்கிற கூத்து."
"நீ கூத்துன்னு சொன்னதும் ஞாபகம் வருது, நான் ஆக்ட் பண்ண ஒத்துண்டுட்டேன் மாஸ்டர்கிட்ட, இன்னிக்கு போன்ல சொல்லிட்டேன்."
"அப்படியா? ஆனா நீ நல்லா யோசிச்ச இல்லியா? ஏன்னா உன் எஜுகேஷன பத்தி யோசிச்சியா, அத விட்டுடாத அஜய்."
'கண்டிப்பா மாட்டேன்மா, நான் சின்ன வயசா இருந்தப்பவே மாஸ்டர்கிட்ட சொன்னேன்மா, எனக்கு படிப்புதான் முக்கியம் அதுக்காக நான் எவ்வளவு வேண்ணா உழைப்பேன், அதே நேரத்துல, படிப்பு பாதிக்கும்னா எவ்வளவு பணம் கிடைச்சாலும் அது எனக்கு வேணாம்னு சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்தப்பவே நான் சொன்னேன். இப்ப என்னம்மா படிப்பை விட்டுடுவேனா, அதுவும் மெடிஸினை நான் ஆசை பட்டு சேர்ந்த கோர்ஸ் அத விட்டுடுவேனா?"
"சரிப்பா, இஃப் யு ஆர் கான்பிடன்ட், ஐ அம் ஹாப்பி!"
“மாஸ்டர் சொன்ன மாதிரி, ஹாஸ்பிடல் கட்ட நிறைய பணம் வேணும்மா, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சம்பாரிச்சு சேர்த்துடனும் அதான் ஒத்துண்டேன். டோண்ட் ஒர்ரி மாம் என் ஸ்டடிஸ்க்கு ஒன்னும் ஆகாது.”
“ ஐ டோண்ட் வாண்ட் யு டு கெட் டிராப்ட்(trapped) இன் ஆக்டிங் அஜய்!”
“எஸ் மாம், ஐ வில் பி கேர்புல்!”
“ஆமாம், இங்க இந்த அப்பாவி ஒருத்தன் இருக்கறத மறந்து நீங்க ரெண்டு பேரும் உங்க