மறுபடியும்.
அவருக்கு புரிந்தது, "ஓஹோ தனத்தை பார்த்து விட்டான். அதுவும் நல்லதுதான்.'
"ஆமாம்பா தனம்தான்பா, "என்றார் ஜாஃபர்
அப்போது தனம் இறங்கி வந்தாள், அப்துலை பார்க்கவில்லை, ஜாஃபரை பார்த்து, எல்லாம் ஓகே தானே அங்கிள், நான் போலாமா?" என்று கேட்டாள்
"தனம் " என்று யாரோ உருகி அழைப்பதைக் கேட்ட அவள் திரும்பினாள். அவனைப் பார்த்தவுடன் "ஆதூ ....." என்று மெதுவாக கீழே சாய்ந்தாள், அவள் விழுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டு அவளை தாங்கி பிடித்துக் கொண்டான், அப்துல்.
"என்ன ஆச்சு தனம் உனக்கு, என்னடா ஆச்சு உனக்கு ?" என்று அவன் வருத்தப் பட்டான் கண்கள் குளமாயின.
ஜாஃபர், அருகிலிருக்கும் ஜாடியிலிருந்து தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தார், அப்துல் அவள் முகத்தை துடைத்தான். சிறிய கூட்டம் சேர்ந்து விட்டது. அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார் ஜாஃபர், அவருக்கு தெரியும் இது இவர்கள் பெர்சனல் விஷயம் மற்றவர்களுக்கு தெரியக் கூடாதென்று.
சிறிது நேரத்தில் கண் விழித்து பார்த்தாள் தனம். அவள் அப்துலின் கையில் இருந்தாள், பக்கத்தில் ஜாஃபர். அவளுக்கு வெட்கமாக இருந்தது உடனடியாக அவன் கையிலிருந்து எழுந்தாள், "என்ன நீ எதுக்கு எழுந்துக்கறே இரு முதல்ல உனக்கு என்ன ஆச்சு ஏன் மயக்கம் வந்தது?"
"அது ஒண்ணுமில்ல, என்னை விடு!" என்று எழுந்து நின்றுக் கொண்டாள்
ஜாஃபர் தான், சரி ஆபிஸ் ரூமுக்கு போலாம் வாங்க ரெண்டு பேரும் " என்று பொது இடத்திலிருந்து ஆபிஸுக்குள் அவர்களை கூட்டிக் கொண்டு சென்றார்.
"தனம், அப்துல் என் மகன்மா!" என்றார், அவளை பார்த்து .
அவள், அவனை திரும்பி பார்த்தாள்.... அவரே தொடர போனார் , அதற்குள் தனம் " அங்கிள், எனக்கு உங்க மகனை ஏற்கனவே தெரியும், நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுலேர்ந்து ஸ்கூல் பிரெண்ட்ஸ், "
"அப்படியாம்மா?"
"அங்கிள், எனக்கு அவரிடம் கொஞ்சம் பேசணும், "என்றாள்.
"சரிம்மா! பேசும்மா, நானும் இன்னிக்கு ரெக்கார்டிங்கை செக் பண்ணிட்டு வந்துடறேன்!"
"சரிங்க அங்கிள்..." அவர் அப்துலை பார்த்து விட்டு நகர போனார்.. " அங்கிள் தாங்க்ஸ், என்னை தப்பா நினைச்சுக்கலையே?" என்று கேட்டாள்.
"என்னம்மா நீ, உன்னை பத்தி எனக்கு தெரியாதா? பேசும்மா பேசு! " என்று கூறிவிட்டு