அங்கிருந்து நகர்ந்தார் .
அவர் வெளியே போனதும், "என்ன தனம் நீ எப்படியிருக்க? எவ்வளவு வருஷம் ஆச்சு? என்னை ஞாபகம் இருக்கா?" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் அப்துல்.
"உன்னை ஞாபகம் இல்லாமலா, அதான், உன்னை மறக்க முடியாத படி செய்துட்டியே, எப்படி மறப்பதாம்?"
"என்ன சொல்ற?" என்று கேள்வியாய் அவள் முகத்தை பார்த்தான்.
அவள் கண்களிலிருந்து கண்ணீர், அவளை அனைத்துக் கொண்டான். "என்னடா, எதுக்கு அழறம்மா, ப்ளீஸ் உன் கண்ணுலேர்ந்து கண்ணீர பார்த்தா என்னால தாங்க முடியல, ப்ளீஸ் அழறத நிறுத்து," என்று வருத்தத்துடன் கூறினான்.
அவன் கண்ணிலும் கண்ணீர் தளும்பியது .
"உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா ஸ்கூல் டேஸ்ல என்ன நடந்ததுன்னு?"
"இப்பதான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஞாபகம் வந்தது, ரொம்ப சின்ன வயதானதால எனக்கு அந்த விஷயம் கொஞ்சம் கூட ஞாபகம் இல்ல, பிறகு என்னோட ஜாடையில் ஒரு பையனை பார்த்தேன், அது ஒரு வேளை?" என்று பேச்சை நிறுத்தினான் .
"நீ எந்த பையனை பார்த்த உன் ஜாடையில்?"
"ஒரு அனாதை பையனை பார்த்தேன்!"
"அந்த அனாதை பையன் உன்னுடைய மகன்தான் அப்துல்!" என்றாள் தேய்ந்த குரலில்..
"என்ன அவன் நம்ம மகனா? நீ எப்படி அதை என் கிட்ட சொல்லவேயில்லை?"
"சொல்லியிருப்பேன், ஒரு வேளை நீ ஊற விட்டு போகாம இருந்தா, நீதான் சொல்லிக்காம போயிட்டியே! நல்லவர்களுக்கு அழகு சொல்லிக்காம போறதுன்ற பழைய மொழியை உறுதி படுத்திட்டியே !"
"ஸோ ஸாரி, தனம்... அப்பா பொழைப்புக்கு இந்த ஊருக்கு வந்துட்டாரு, அப்போ எனக்கு என்ன வயசு பதினாலு வயசு, நீயும் ஸ்கூலுக்கு வரல, நாம நடந்துக்கிட்டது ஏதோ கனவு போல ஆயிடுத்து, எனக்கு புரியவும் இல்ல, ஏதோ உணர்ச்சியில் நடந்தது. அது தப்பா ரைட்டான்னு கூட தெரியல, ஐ அம் ரியல்லி ஸாரி!, வெல் சும்மா ஸாரி சொல்ற அளவு ஸாரி இல்ல, ஆனா இப்போ அதை தவிர வேற சொல்ல தெரியல. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு." என்று அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் காலில் விழுந்தான்.
"ஹேய் என்ன பண்ற நீ பயித்தியமா நீ , என்ன பண்ற என் கால்ல விழற?"
"இதுக்கு மேல ஏதாவது இருந்தா சொல்லு அதைக் கூட செய்வேன், இது ஒன்னுமே இல்ல நான் செய்ஞ்ச தப்புக்கு, பொறுப்பே இல்லாதவன் நான்" என்று தன்னையே கடித்துக் கொண்டான்.