தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 14 - முகில் தினகரன்
அந்த அறைக்குள் தாறுமாறாய்க் கழன்று கிடந்த ஒயர்களை எடுத்த ராதிகா யோசித்து...யோசித்து..அதையெல்லாம் எங்கெங்கோ செருகினாள்
ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் அவளருகேயே நின்றிருந்தார் ஏ.சி.தீனதயாள்.
எல்லா இணைப்புக்களையும் ஓரளவிற்கு இணைத்த பின் சிஸ்ட்த்தை “ஆன்”செய்து பார்த்தாள் ராதிகா.
மானிட்டர் மெல்ல உயிர் பெற்று “கச...கச” வென்று கோடுகளையும் நிறங்களையும் கொட்ட இணைப்புக்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அப்போதும் படம் வராது போக மொத்தமாக எல்லாவற்றையும் “ஆஃப்” செய்து விட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தாள்.
நேரம் ஓடிக் கொண்டேயிருக்க சலிப்படைந்த ஏ.சி. “இட்ஸ் ஓ.கே...முடியலைன்னா விட்டுடும்மா...வேற யாராவது ஸ்பெஷலிஸ்டை அழைத்து வந்து முயற்சி பண்ணுவோம்!” என்றார்.
அவர் சொல்லியதைக் காதில் கூட வாங்காமல் சிரத்தையுடன் தன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராதிகா இறுதியில் ஜெயித்தே விட்டாள்.
மானிட்டர் தான் விழுங்கிச் சேர்த்து வைத்திருந்த காட்சிகளை ஒவ்வொன்றாய் விரிக்க ஆரம்பித்த அதே விநாடியில் “குபுக்”கென்று அழ ஆரம்பித்தாள் ராதிகா.
“அடடே..என்னாச்சும்மா...ஏன் திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டே?” ஏ.சி.பதட்டமானார்.
“சார்...என்னோட முகிலன்..கோரமா...கொடூரமா சிதைக்கப்பட்டு சாகறதை நான் இன்னொரு தரம் பார்க்கர அளவிற்கு என் மனசுல தெம்பு இல்லை சார்!” கரகரத்துச் சொன்னாள்.
“நோ...நோ...ராதிகா!.....நீ படிச்சவ!...பக்குவப்பட்டவ!...ஸ்மார்ட் கேர்ள்!...நீயே இப்படிச் சொல்லலாமா?”
அவள் பதில் பேசாது குலுங்க
அவள் தோளைத் தொட்ட ஏசி. “உன்னோட வேதனை எனக்குப் புரியுதும்மா!...ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் நான் சொன்னாலும் அதெல்லாம் வெற்று வார்த்தைகளே!..ன்னு எனக்குத் தெரியாமலில்லை!...இருந்தாலும் நடந்த நிகழ்வுகளின் பின் புலத்தில் என்ன இருக்கு?...இதற்கெல்லாம் யார்...அல்லது எது? காரணம்?.என்கிற உண்மையைக் கண்டுபிடிக்கற பொறுப்பும் நமக்கு இருக்குதும்மா!...ஸோ..கொஞ்சம்..மனசைக் கல்லாக்கிக்கிட்டு...அந்தக் காட்சிகளை ஓப்பன் பண்ணும்மா..ப்ளீஸ்!”
“ஏ.சி.யின் வார்த்தைகளால் லேசாய் ஆறுதலடைந்த ராதிகா அந்த அம்ங்கல இரவின் காட்சிகளை ஆரம்பத்திலிருந்து ஏ.சி.தீனதயாளுக்குக் காட்டினாள்.
முகிலனின் தொப்பிக் காமிரா விழுங்கித் துப்பிய காட்சிகள் ஏ.சி.யின் ரத்தத்தையே உறையச்