“அப்புறம் என்ன? இப்போ வேலை அது இதுன்னு யோசிக்காம இரண்டுப் பேரும் என்ஜாய் செய்ங்க. இதைப் பத்தி அப்புறமா யோசிங்க!”
அமுதாவிடம் மேலும் சிறிது நிமிடங்கள் பேசி விட்டு அழைப்பை துண்டித்தப் போது மஞ்சுவிற்கு கோபமாக வந்தது!
ஏன் வாழ்க்கையில் எதுவுமே நினைத்துப் போல நடக்க மாட்டேன் என்கிறது??? எங்கேயும் எதிலுமே ஒரு ட்விஸ்ட் வைத்து தான் நடக்க வேண்டுமா???
கல்யாணம், அதன் பின் வந்த வாழ்க்கை, இப்போது வேலை... எல்லாமே அப்படி தான்!!!
ச்சே!!!
அப்போது போன் மீண்டும் ஒலித்தது... காலர் ஐடியில் நம்பரைப் பார்த்தாள். மனோஜ் ஆபீஸ் நம்பர்...
அலுவலகம் சென்றப் பிறகு நேரம் கிடைக்கும் போது ஆபீஸ் வந்து விட்டதை சொல்ல தினமும் அழைப்பான் மனோஜ்...
இன்றும் அழைத்தான்!
‘மனோஜ் உன் கிட்ட சொல்லலையா?’ என்ற அமுதாவின் கேள்வி பேக்கிரவுன்டில் ஓட, போனை எடுத்து,
“ஹலோ” என்றாள் கோபமாக!
தொடரும்...