இருப்பான்...நீ இவனை நம்ம மகனாகவே நெனச்சுக்கோ...போதுமா?” என்றார்.
“என்னப்பா...முரளி...சரிதானே?” முரளியைப் பார்த்துக் கேட்டார்.
அவன் “சரி”யென்று தலையசைக்க, “ம்ஹூம்....அதெல்லாம் முடியாது...நீ இந்த வீட்டுல என் கூடத்தான் இருக்கணும்” என்றாள் ஜெகதாம்பாள்.
சூழ்நிலையைப் புரிந்து கொண்ட முரளி, “அய்யா...அம்மா சொல்வது போல் நான் இந்த வீட்டிலேயே இருக்கிறேன்” என்றான்.
“அப்படிச் சொல்லுடா என் ராசாக்குட்டி” என்று சொல்லி அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள் ஜெகதாம்பாள்.
“சரி ஜெகதா...நீ போய் நம்ம பையனுக்கு மதிய உணவு தயார் பண்ணு!...நான் அவன் கூடப் பேசிட்டிருக்கேன்” என்று சொல்லி அவளை சமையலறைக்கு அனுப்பினார் சிங்கமுத்து. அவளும் “ஹய்யா...நான் என் பையனுக்கு என் கையாலேயே சமைச்சுப் போடப் போறேன்” என்று சொல்லிக் கொண்டு சந்தோஷமாய் ஓடினாள்.
அவள் சென்றதும், “தம்பி...நீ உன் அம்மாவையும் தங்கச்சியையும் இங்க வந்து... அவுட் ஹவுஸ்ல இருந்துக்கச் சொல்லு..நீ இந்த வீட்டில் இருந்துக்கோ!...உனக்கு டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்ல வேலை போட்டுடறேன்!....காலைல அங்க போயிட்டு...இங்க ஈவினிங் இங்க வந்துடு!...என்ன?” என்று சிங்கமுத்து சொல்ல,
தயங்கினான் முரளி. “அய்யா...எத்தனை நாளைக்கு இந்த நாடகத்தை நடத்த முடியும்?...எங்கம்மாவும் தங்கச்சியும் இங்க வந்து தங்கும் போது..நான் அவர்களுடனும் என் நேரத்தை செலவழிக்க வேண்டாமா?”
“நீ சொல்றது சரிதான் முரளி!...முதலாளியம்மா எப்படியும் கூடிய சீக்கிரத்துல நார்மலுக்கு வந்திடுவாங்க!...அப்ப...நாம உண்மையை அவங்களுக்குச் சொல்லிடலாம்!...அதுவரைக்கும் சமாளிப்போம்” என்றார் தங்கவேலு.
அப்போதும் முரளி யோசிக்க, “த பாருப்பா..உங்க அம்மாகிட்டேயும்...தங்கச்சி கிட்டேயும் நான் பேசறேன்!...அவங்களும் ஒரு தாய்!...நிச்சயம் அவங்க இந்த தாயோட மனநிலையை புரிஞ்சுக்குவாங்க!” தங்கவேலு சொன்னார்.
“சரிங்க” என்றான் முரளி.
தொடரும்