“நான் மழைல நனைஞ்சேனா, உடனே உங்க ஞாபகம் வந்துச்சு... ஏன்னு தெரியுமா???”
மனோஜ் பதில் சொல்லவில்லை...
அவனும் புரிந்துக் கொண்டான் என்பது மஞ்சுவிற்கு புரிந்தது... அவனுக்கு கேட்பது போல மெல்ல சிரித்தவள்,
“மனோஜ், சூப்பர் ஷார்ப்...” என்றாள் கேலியாக...
“சீக்கிரம் போன வேலையை முடிச்சுட்டு கிளம்பி வா pbs... நீ பக்கத்துல இல்லாம எப்படியோ இருக்கு...”
“நான் இன்னும் ஆபீஸ் போகவே இல்லை. அதுக்குள்ளே சொன்னா எப்படி??”
“நீ எங்கே இருக்க?? நான் லேன்ட்லைன்ல கால் செய்றேன்...”
“உங்க வீட்டுல தான் இருக்கேன்...”
“அதுக்குள்ளே அங்கே போயிட்டீயா??? நம்ப முடியலையே??? எப்போவும் நான் சது பக்கத்துல இருக்கனும், அம்மா பக்கத்துல இருக்கனும்னு அழுவ...”
“ஹ்ம்ம்...!!!”
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் pbs... உனக்கு எங்கே பிடிக்குதோ அங்கே தங்கிக்கோ...”
“என்னை யாரும் கம்பல் செய்யலை மனோஜ்... இங்கே வீட்டுல சின்ன ப்ராப்ளம்... உங்க அண்ணாக்கும், வினோக்கும் நடுல சண்டைன்னு உங்க தங்கை சொன்னா... என்னன்னு கேட்க வந்தேன்...”
“அதுல எல்லாம் தலைப் போடாதே pbs...” என்ற மனோஜின் குரல் இப்போது மாறுப்பட்டு ஒலித்தது.
அப்படியா என்று கேட்காமல் மனோஜ் தலைப் போடாதே என்றது மஞ்சுவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது...
”அப்போ, உங்களுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியுமா???” என்றுக் கேட்டப் போது அவளின் குரலில் உஷ்ணம் ஏறி இருந்தது!!!
தொடரும்...