“என்னை இன்னசன்ட் ஹஸ்பன்ட்ன்னு சொல்லி இன்சல்ட் செய்தது யாரு???”
“நான் தான்... தப்பு தான்...”
“இப்படி தப்புன்னு சொல்லி முடிச்சா எப்படி??”
அவன் கேட்பது புரிந்து கன்னங்கள் சிவந்து மின்ன, தன் இதழ்களை போன் ரீசிவரில் பதித்தாள் மஞ்சு...
“இப்போ உன் மன்னிப்பு அக்சப்டட்... பை pbs... தேவை இல்லாத எதிலேயும் தலைப் போடாதே...”
போனை மீண்டும் மேஜையில் வைத்து விட்டு மனோஜிடம் பேசியதை மனதுள் அசைப் போட்டாள் மஞ்சு...
அவன் சொன்ன ‘தேவை இல்லாத எதிலேயும் தலைப் போடாதே’ என்பதை யோசித்தாள்...
அவளுக்கும் சம்மந்தமில்லாத எதிலும் ஈடுப்பாடு காட்ட விருப்பம் இருக்கவில்லை... ஆனால், விரும்பியோ விரும்பாமலோ, குடும்பத்தில் நடந்த சச்சரவு அவளையும் வந்து எட்டி இருக்கிறது...
ஜோதி பக்கம் இருந்து விஷயங்கள் தெரிந்துக் கொண்டாள்... மனோஜ் வழியாக ஷண்முகம் பக்கம் இருந்தும் ஓரளவுக்கு கேட்டு விட்டாள்... ஆனால் வினோதினி பக்கம் இருந்து எதுவுமே தெரியாதே??
விநோதினியிடம் நேரடியாக கேட்டு தெரிந்து அத்தோடு விட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தாள்...!
ஜெட் லாக் இருந்ததால் விடி காலையிலேயே மஞ்சுவிற்கு விழிப்பு வந்து விட்டது...
கொஞ்சம் நேரம் சோம்பலுடன் படுத்து புரண்டு விட்டு, அதுவும் போரடிக்க எழுந்து, குளித்து கீழிறங்கி சென்றாள்...
நிர்மலா சமையலறையில் இருக்கவும், அவளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சின்ன, சின்ன வேலைகள் செய்தாள்...
ஆனால் சிறுக் குழந்தையின் சத்தம் கேட்டதோ இல்லையோ, உடனே சமையலைறையில் இருந்து நகர்ந்தாள்...
அவள் எதிர்பார்த்ததுப் போலவே வினோதினியும், வேதாந்தும் இருந்தார்கள்... ஆனால், அவர்கள் வெளியே கிளம்பி செல்ல தயாராக இருந்தது மஞ்சு எதிர்பார்க்காதது...
“வினோ, எங்கே அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க???”
“இவனை அம்மா வீட்டுல விட்டுட்டு ஆபீஸ் போகனும் மஞ்சு... இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்...”