“கமான் வினோ! அது உண்மை இல்லைன்னு உங்களுக்கே தெரியும்... பட் அவங்களை விடுங்க... உங்க ஹஸ்பன்ட் பத்தி சொல்லுங்க... நீங்க இரண்டுப் பேரும் இப்படி இருக்குறதைப் பார்த்தா எனக்கே எப்படியோ இருக்கு... உங்களை மாதிரி மேட் ஃபார் ஈச் அதர் கப்பில் நான் பார்த்ததே கிடையாது... அதும் நீங்க அவர் கிட்ட பேசாம இருக்குறதை என்னால நம்பவே முடியலை...”
“நான் பேசாம இருக்கனும்னு நினைக்கலை மஞ்சு...”
“என்ன சண்டையா இருக்கட்டும், கோபமா இருக்கட்டும்... அதுக்காக குழந்தையை இப்படி பிரிச்சு வைக்குறது...” என்று மஞ்சு பேசிக் கொண்டிருக்கும் போது வினோதினி அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்க்கவும்,
“வேண்டாமே வினோ...” என்று முடித்தாள் மஞ்சு...
“அவர் நினைச்சா அதை மாத்த முடியுமே மஞ்சு... உனக்குப் புரியலை...”
“எனக்குப் புரியுதோ இல்லையோ, உங்களுக்குப் புரியலை... அவர் நினைச்சா உங்களை கம்பல் செய்து குழந்தையை வீட்டுலேயே வைக்க முடியாதா..??”
“அவர் அதை செய்ய வேண்டியது தானே??? அடுத்த நிமிஷம் நானும் வேதாந்தும் அங்கே இருக்க மாட்டோம்...”
“அதே தான் வினோ...! நீங்க அப்படி போக கூடாதுங்குறதுக்காக தான் அவர் அதை செய்யாம இருக்கார்... எனக்கே இது புரியுது உங்களுக்கு புரியலையா??? மனோஜ் கிட்ட உங்க சண்டை எதைப் பத்தியும் என் கிட்ட சொல்ல வேண்டாம், அப்புறம் நான் உங்க கிட்ட பேசாம இருந்திருவேன்னு, உங்களுக்காக அவ்வளவு யோசிச்சு சொல்லி இருக்கார்...”
“ப்ச்... மஞ்சு...” என்றாள் வினோதினி அலுப்புடன்!
மஞ்சு கேள்வியாக பார்க்கவும்,
“நீயாவது என்னைப் புரிஞ்சுப்ப, என் சைட்ல பேசுவேன்னு நினைச்சேன்... நீ என்னடான்னா அவருக்கு, அவர் அம்மாக்கும் இப்படி ஜால்ரா போடுற??? உனக்கு இருந்த ப்ராப்ளம்ஸ் முடிஞ்ச உடனே அவங்க எல்லோரும் உனக்கு நல்லவங்க ஆயிட்டாங்க!!!” என்றாள் வினோதினி கசப்புடன்!
“வினோ...”
“வேண்டாம் மஞ்சு போதும்... நான் யாருக்கும் எதிரா போகலை... நான், என் குடும்பம்னு வாழனும்னு ஆசைப் படுறேன்... அவ்வளவு தான்... அப்படி தான் நிறையப் பேர் இருக்காங்க... அதுல தப்பு இருக்குறதா எனக்கு தெரியலை... நீ இப்படி பேசுவேன்னு நான் நினைக்கலை...”
“வினோ...”