(Reading time: 5 - 9 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

அதிலிருந்து தொடங்கி அவனும் அவர்களின் இளவயது பற்றி பழையக் கதைகள் சொன்னான். இது நிர்மலாவிற்கு பிடித்த தலைப்பு என்பதால் அவளும் அவளின் குழந்தைகள் செய்த குறும்புகளை பற்றி அவ்வப்போது பகிர்ந்தாள்.

  

பேச்சின் நடுவே,

  

“மனோஜும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்... அவன் எதுக்கு அதுக்குள்ளே ஆபீஸ்க்கு போனான்?” என மஞ்சுவிடம் கேட்டான் ஷண்முகம்.

  

“உங்க தம்பியை பத்தி உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே! அவரால வேலையை விட்டு தள்ளி இருக்க முடியாது... இங்கே இருக்க டீம் கூட பேசனும்னு சொன்னார்...” என்றாள் மஞ்சு!

  

அவளுக்குமே கூட மனோஜ் இப்படி லீவ் எடுத்து வந்த இடத்தில் அலுவலகம் சென்றது பிடிக்கவில்லை தான்! அதுவும் இன்னும் ஐந்து நாட்களில் கிளம்ப வேறு வேண்டும்...

  

மனோஜ் திரும்பி வந்ததும் அதைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தாள்... ஆனால் அவன் அவளை முழுவதுமாக பேசவும் விடவில்லை...

  

“pbs... இப்போ உன்னை நல்ல விதமா பார்த்துக்குற முழு பொறுப்பு எனக்கு இருக்கு... உன்னை நான் ராணி மாதிரி பார்துக்க் ஆசைப் படுறேன்... அதுக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்...”

  

“இப்படி சொல்லிட்டு நீங்க என் கூட இல்லாம இருந்தா எப்படி? அதும் அஞ்சு நாள்ல கிளம்பனும்... நாம இன்னும் வீட்டுக்கு கூட போகலை...”

  

“அவ்வளவு தானே, நாளைக்கே போகலாம்...”

  

“அதென்ன நாளைக்கு? இன்னைக்கு நைட் போனா என்ன???”

  

“ஹ்ம்ம்ம்... நான் நைட்க்கு என் pbs கூட ஸ்பென்ட் செய்ய பெரிய மெகா ப்ளான் எல்லாம்

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.