வச்சிருக்கேன்...”
மஞ்சு வெட்கம் மின்ன அவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்...
“நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் மனோஜ்... அத்தை, என் கிட்ட இப்போ குழந்தை வேண்டாம்னு இருக்கோமான்னு கேட்டாங்க...”
“அம்மா எதுக்கு அதெல்லாம் கேட்குறாங்க???”
“அவங்க மட்டுமில்லை, வினோ கூட தான் கேட்டாங்க... அமுதா எப்போவும் கேட்பா...”
“அவங்க கேட்கட்டும் pbs... நான் கூட யோசிச்சிருக்கேன்... ஆனால் இப்போ வேண்டாம்... நாம முதல்ல நம்ம வாழ்க்கையில செட்டில் ஆவோம்... நமக்கு கல்யாணம் ஆனதும் நாம ஹனிமூன் கூட போகலை... இனிமேல் அப்படி இருக்க கூடாது... உனக்கு எல்லாமே நான் கரக்ட்டா செய்யனும்... நீ எனக்காக எவ்வளவோ செய்திருக்க...”
“க்கும்...” என அலுத்துக் கொண்டான் மஞ்சு.
சிணுங்கலாக ஆரம்பித்த அந்த அலுப்பு, அடுத்து வரும் மாதங்களில் பல மடங்கு பெருகப் போவதை மஞ்சு அறிந்திருக்கவில்லை...!
தொடரும்...