அவனுள் எழுந்தது...
சில நாட்களாக அவன் பின்னே தள்ளி வைத்திருந்த கேள்வி மீண்டும் இப்போது எழுந்தது...
அமுதாவிடம் நேரடியாக மஞ்சு பற்றி பேச வேண்டுமோ??? அது தேவையா தேவை இல்லையா??? சரியா தவறா???
மனோஜுக்குள் இந்த கேள்விகள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் அமுதா தொடர்ந்து பழைய கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சரவணனும் அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான்...
பேச்சின் நடுவே,
“மனோஜ், இன்னைக்கு உங்க கூட மஞ்சுவும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்... ஓல்ட் ஃபிரென்ட்ஸ் மீட் போல இருந்திருக்கும்...” என்றான் சரவணன்...
அதற்கு மனோஜ் பதில் சொல்ல அவசியமே இல்லாது,
“இது ப்ரோபஷ்னல் டின்னர் மீட்ன்னு எனக்கு பெரிய லெக்சர் எல்லாம் கொடுத்தீங்க?? இப்போ என்ன இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்க?” என்று அமுதா தன் கணவனிடம் கேட்டாள்.
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? மனோஜ் அவரோட ஒய்ஃபை அழைச்சுட்டு வந்திருக்கலாம்னு சொன்னேன்...”
“நீங்க எல்லாம் ப்ரோபஷ்னல் டின்னருக்கு ஒய்ஃபையும் அழைச்சுட்டு வருவீங்களா???”
“கம் ஆன் அமுதா... என்ன இப்படி பீகேவ் செய்ற?? பீ அ ஸ்போர்ட்! மெச்சுர்டா நடந்துக்கோ...”
சரவணனும் அமுதாவும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, மனோஜ் அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்...