முதல் குழந்தை பிறந்தது. அவன் எதை பற்றியும் கவலைப் படவில்லை, அவன் வியாபார ரீதியாக வெளிநாட்டுக்கு போய் விட்டான். குழந்தைபிறந்தவுடன் தான் வந்தான், அதற்கு பிறகு வந்ததும், "எப்படியிருக்க?" என்று அவளை விசாரித்தான்.
அவள் பதில் சொல்லாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன, என் மேல் கோவமா ?" என்று அவளை அணுகினான் . அவள் பயந்து அவனிடமிருந்து விலகினாள், அந்த பயம் அவனை ரவுத்ரமாக்கியது, அதே முறையை கையாண்டான்... அவளுடைய இத்தனை நாள் பிரிவு அவனை வாட்டியது. குழந்தையை பார்க்க வேண்டும் என்று இருந்த ஆசையை உதறி தள்ளி விட்டான்.
அவன் நிறைய டிராவல் செய்வான், அவள் குழந்தையை நல்லபடி வளர்த்தாள். டாக்டரிடம் போகும்போது, குழந்தைக்கு விளையாட்டு சாமான், குழந்தைக்கு புக்ஸ், டிரஸ்ஸஸ் என்று விதவிதமாக வாங்கி கொண்டு போவாள். குழந்தையுடன் நிறைய நேரம் செலவழிப்பாள். இப்படியே ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் நடக்கும். வேலைகாரர்கள் குழந்தையை பார்த்துக் கொண்டார்கள். அவளுக்கு செக்யூரிட்டி, வேலைக்கு
ஆள், செலவுக்கு நிறைய பணம், என்று எல்லாவித சவுகரியமும் செய்து கொடுத்திருந்தான்.
இப்படியே அவளுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தது.. முதல் குழந்தைக்கும், அடுத்த குழைந்துக்கும் பெரிய வித்யாசம் இல்லாமல், உடனுக்குடன் அவள் பெற்றுக் கொண்டாள்."
அவள் இன்னும் அவனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவில்லை... அவள் இப்போது ஆறாவது முறையாக கர்ப்பம் தரித்தாள், வழக்கம் போல டாக்டரிடம் சென்றிருந்தாள், அவர் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்தவர். அவள் முதன் முறை கர்பம் தரித்து சென்றபோது, அவளுக்கு தமிழ் பேசும் டாக்டர் என்று ஒரு விதமான நிம்மதியாக உணர்ந்தாள். அப்போதிருந்து அவர்தான் அவள் பிரசவத்தை கவனிப்பவர். அதிகம் அவளிடம் கேள்வி கேட்க மாட்டார். "மானசா, இது ஒன்னோட ஆறாவது குழந்தை. இந்த காலத்துல யாரும் ஒண்ணுக்கு மேல பெத்துக்கருதில்ல, அப்படியே மிஞ்சி போனால ரெண்டு குழந்தைதான். ஆச்சர்யமா இருக்கு