“அதென்னவோ உண்மை தான்... உன்னைப் பார்க்காம நான் கிளம்பி இருக்க மாட்டேன்...” என்றாள் மென்மையாக...
“எனக்குத் தெரியும்...” என்ற மஞ்சு, முதல் தடவையாக சரவணன் பக்கம் திரும்பினாள்.
“உங்களுக்கு எங்க வீட்டுல ரொம்ப தடபுடலான வரவேற்பு கொடுத்திருக்கோம் சரா... எப்படி இருக்கு இந்த வரவேற்பு???”
“அருமை! அருமை... இந்த மாதிரி ஒரு வரவேற்பு நான் கேள்வி பட்டதே கிடையாது!!!” என்றான் சரவணன் புன்னகை மின்ன!
“நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ன்னு சொல்லுங்க... சரி, நீங்களும், மனோஜும் பேசிட்டு இருங்க... இன்னும் பத்து நிமிஷத்துல பால்கோவா ரெடி ஆயிடும்.. முடிச்சுட்டு நாங்க வரோம்...” என்ற மஞ்சு, கணவன் பக்கம் பார்த்து,
“போன் ரூமுல இருந்தது மனோஜ்...” என்றாள் குறிப்பாக!
“அப்படி தான் இருக்கும்னு கெஸ் செய்தேன் மஞ்சு...” என்றான் மனோஜ்.
“சரி, பேசிட்டு இருங்க...” என்று சொல்லி, அமுதாவுடன் சமையலறைக்கு சென்றாள் மஞ்சு...
சரவணனும், மனோஜும் தங்களுக்குள் பேசினாலும் கூட அவர்களின் கண்கள் அவ்வப்போது சமையலறையில் சிரிப்பு மிகுந்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்த தம் தம் மனைவியிடம் தான் சென்று வந்தது... தோழிகள் நடுவே தெரிந்த ‘கெமிஸ்ட்ரி’ பார்த்து அவர்களுக்கு கொஞ்சம் (ஹுஹும்... நிறையவே) பொறாமையாக கூட இருந்தது...
மஞ்சுவும், அமுதாவும் ஆண்களைப் பற்றி கவலைப் படாது தங்களின் சண்டைக்கான காரணத்தில் தொடங்கி ஊர் கதை, உலகத்து கதை என அனைத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள்...