“மனோஜ், நானே உங்க கிட்ட பேசனும்னு இருந்தேன்...” என்றாள் அவள் தயக்கத்துடன்...
“என்ன pbs? உனக்கு ஏதாவது வாங்கனுமா??? எதுவா இருந்தாலும் சொல்லு...”
“எதுவும் இப்போ வேண்டாம் மனோஜ்... நான் எப்போ இந்தியா போறதுன்னு நாம பேசி முடிவுக்கு வரனும்... அமுதா சிக்ஸ் மன்த்ஸ்க்கு மேல ப்ளைட்ல ட்ராவல் செய்ய முடியாதுன்னு சொன்னா... அதனால இப்போவே கிளம்புறது சரியா இருக்கும்... நீங்க டிக்கெட் பத்தி கேட்டு பார்க்குறீங்களா? நல்ல டீல் கிடைக்கும் போது எனக்கு புக் செய்ங்க...”
மஞ்சு புரியாத மொழி பேசுவதுப் போல விழித்தான் மனோஜ்.
“நீ எதுக்கு இந்தியா போகனும் மஞ்சு?? இங்கே உனக்கு என்ன குறைச்சல்??”
“ஒரு குறையும் இல்லை... ஊருக்குப் போனா ஈஸியா இருக்கும்... அம்மா, அத்தை, வினோ எல்லோரும் பக்கத்திலேயே இருப்பாங்க...”
“இங்கே தான் நான் இருக்கேனே???”
மனோஜ் அதை சொன்ன விதம் மஞ்சு முகத்தில் புன்னகையை வரவைத்தது.
“ஆமாம், நீங்க இருக்கீங்க...” என்றாள் அந்த சிரிப்பு குரலிலும் எதிரொலிக்க.
“நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் மஞ்சு.... நீ இங்கேயே இரு... உன்னை அங்கே அனுப்பிட்டு நான் தனியா இங்கே இருந்தா எனக்கு எப்படியோ இருக்கும்...”
மஞ்சுவிற்கு சரி என்பதா வேண்டாம் என்பதா என்று புரியவில்லை...
இந்தியா செல்ல முடிந்தால் அருகே பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் மனம் அமைதியாக இருக்கும் என்று தோன்றியது...