(Reading time: 4 - 8 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

ஆனால் அதே நேரம் மனோஜின் அருகே இருந்தாலும் நன்றாக தான் இருக்கும்...

  

அவன் இங்கே தனியாக இருந்து அவளை பற்றி கவலைப் பட்டு குழம்ப தான் செய்வான்...

  

ஆனால் ஒருவேளை டெலிவரியில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால்...

  

தெளிவாக முடிவெடுக்க முடியாது மஞ்சு குழம்பிக் கொண்டிருக்க,

  

“நாம அம்மா, அத்தை யாராவது ஒருத்தரை இங்கே கூப்பிடலாம் pbs... அவங்க இங்கே வந்தா உனக்கு ஈஸியா இருக்கும் தானே?

  

மஞ்சுவின் முகம் சட்டென்று மலர்ந்தது...

  

கணவனின் ஐடியாவை ஏற்றுக் கொள்வதாக தலையை ஆட்டினாள்...!

  

அப்போது அது நல்ல ஐடியா என்று தான் அவளுக்கு உண்மையாகவே தோன்றியது... ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அவளுக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது...

  

தாய்மை அடைந்திருப்பதன் காரணமாக ஏற்பட்டிருந்த சோர்வு, அதன் கூடவே பகல் முழுவதும் ஒற்றை ஆளாக அபார்ட்மென்ட்டில் கழிக்க வேண்டி இருப்பதால் ஏற்பட்ட தனிமை என எல்லாமுமாக அவளை வாட்டியது...

  

அதெல்லாம் போதாது என்று அவள் மனதில் இருக்கும் குறைகளை மனோஜிடம் அவளால் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை வேறு ஏற்பட்டு இருந்தது...

  

மனோஜ் அவளை தாங்கோ தாங்கென்று தாங்கினான்... ஆனால் அவனிடம் டையர்டாக இருக்கிறது, போர் அடிக்குறது என்றால் அவன் எப்படி ‘ரியாக்ட் செய்வான் என்பது அவளுக்குத் தெரியும்... அதனாலேயே அவனை தொல்லை செய்ய விரும்பாது, எதையும் அவனிடம் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருந்தாள்...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.