(Reading time: 5 - 9 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

“ ஏன்னா! அவள் நம்ம பொண்ணு, அப்படில்லாம் போசாதீங்கோ…”

  

“ நாம எப்பவோ அவளை தலை முழுகிட்டோம், உனக்கு மறந்து போச்சா? அவள வெளியே  தள்ளி கதவ சாத்திண்டு்  வாடி“

  

அவள் புறம் திரும்பினாள் அவள் அம்மா, அங்கே அவளைக் காணவில்லை. “ வயத்துல பிள்ளையோட நம்ம கொழந்த எவ்ளோ வருஷம் கழிச்சு வந்திருக்கு, இப்படி துரத்தீட்ங்களே, இது பாவமில்லியா? ஏன்னா இப்படி பண்ணீங்கோ?”

  

அவர் வாய் திறக்கவில்லை. தன் மகள் வயிற்றில் பிள்ளையோடு வந்திருக்கிறாள், அவளை, என் கண்மணியை துரத்திட்டேனே அபிராமி என்னை மன்னிச்சிடும்மா தாயே’ என்று மனதுக்குள் மருகி தன்னுடைய சேரில் போய் உட்கார்ந்து கொண்டார்,  அவர் கண்களில் கண்ணீரோடு உட்கார்ந்திருந்தார்.

  

அவர் மனைவியோ , கடவுளிடம் ‘ என்ட குருவாயூரப்பா என் குழந்தையை ஆத்துக்குள்ள வச்சு அவளுக்கு வேண்டியத செய்ய முடியாமல் பண்ணிட்டியே? இந்த பாவம் எத்தனை ஜன்மத்துக்கு என்னை தொடற போகுதோ ஈஸ்வரா…. என் குழந்தையை நீயே தாயா இருந்து அவளை ரக்ஷிக்கனும் அபிராமி!”

  

தன் வீடு சென்று அடையும் வரை அவள் மனதுவேதனையில் அவளை கொண்றது. காரில் போய் ஏறும் போதும், காரில் போகும் போதும் தன் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள. அவள் வீடு வந்து சேர்ந்த போது … அவள் கணவன் மாதவன் வீட்டில் இருந்தான், “ வந்துட்டியா?” என்று அவளுடைய கையை பிடித்து அழைத்து அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்தான்.

  

“ நான் உன்னை ரொம்ப மிஸ் செய்ஞ்சேன் மானசி. நீ என்ன மிஸ் செய்ஞ்சியான்னு ஒன்ன நான் கேக்க மாட்டேன்” என்று அவளை நிமிர்ந்து பார்க்காமல், அவள் விரல்களை தடவிக் கொண்டே கூறினான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.