“ஆதி?” அழைப்பை ஏற்ற அதே நொடி டென்ஷனும், எதிரிபார்ப்பும் கலந்து அழைத்தாள் சான்வி.
“நெக்ஸ்ட் ரவுன்ட் போயிட்டோம் அக்கா!”
“நீ ஜெயிப்பேன்னு எனக்கு தெரியும்! கங்கிராட்ஸ் ஆதி. ரொம்ப சந்தோஷமா இருக்கு!”
“இது கால் கிணறு தாண்டின கணக்கு தான் அக்கா. இன்னும் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு.”
“ஒவ்வொரு சின்ன அடியா எடுத்து வை, பைனல் டெஸ்டினேஷனுக்கு சுலபமா போயிடலாம். கங்க்ராட்ஸ் & ஆல் தே பெஸ்ட்.”
“தேங்க்ஸ் சான்வி. அம்மாக்கும் அப்பாக்கும் இனிமேல் தான் சொல்லனும்.”
“உடனே பேசு, சந்தோஷப்படுவாங்க.”
“சரி, பேசுறேன்!”
“ஆதி, நான் ஒன்னு சொல்லனும். இனிமேல் என்னோட பேசனும்னா நீ தனியா இருக்கும் போது உன் போன்ல இருந்தே கூப்பிடு. உனக்கு இப்போ டேட்டா ப்ராப்ளம் இல்லையே?”
“இல்லைக்கா இங்கே ப்ரீ வை-பை இருக்கு. அக்ஷரா வீட்டுலேயும் வை-பை இருக்கு.”
“அப்போ இனிமேல் அக்ஷரா பேமிலியை தொந்தரவு செய்யாம நீயே பேசு. ஏற்கனவே அவங்க உனக்கு நிறைய உதவி செய்துட்டாங்க.”
“சரி சான்வி.”
பேசி முடித்ததும் ஆதித்யா சான்வியின் கோரிக்கையை யோசித்தான். அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது. எப்போதும் எல்லோருடனும், பேசு, பழகு என்று தான்