(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

" அப்படியா, என்ன ஹெல்ப் வேணுமோ சொல்லு."

  

" தாங்க்ஸ் அத்திம்பேர்."

  

" எங்க வீட்டுக்கு வாடா கார்த்திக், உன்னோட அக்கா பசங்களை காண வேண்டாமோ?"

  

" கானனும்கா, வரேன்."

  

" நானே, இன்னிக்கு கூட்டிண்டு போறேன்."

  

"சரிக்கா!"

  

மானசாவின் அம்மா வெளியே வந்தார்.  மானசாவும், மாதவன் நாயரும், கார்த்திக்கும், உள்ளே சென்றனர். அவள், அப்பா உணர்வே இல்லாமல் இருப்பதைப் பார்த்த மானசாவும், கார்த்திக்கும் கண்ணீர் விட்டனர்.தன் மனைவியை தன்னோடு அனைத்துக் கொண்டான் மாதவன். ஒரு புறம் கார்த்திக்கையும்  அனைத்துக் கொண்டு, " எல்லாம் சரியாயிடும், கேட்டோ?" என்று கூறினான்.

  

மூன்று பேரும் வெளியே வந்தனர். அப்போது ஒரு ஆள் வந்து ஒரு பாக்கில் பிளாஸ்க்கும்  அத்தோடு சில டிபன் டப்பாக்கள் கொண்டு வந்து கொடுத்தான். முதலில் பிளாஸ்கில்  இருந்த ஜூசை மானஸாவிடம்  கொடுத்தான் மாதவன்.

  

" இந்தா மானசி, இதை குடி, " என்று கூறினான்.

  

 "ஐயோ, இப்ப எனக்கு ஒன்னும் வேண்டாம் நாயர், " என்றாள்.

  

" ஏய், ஒனக்கு வேண்டாம், ஆனா வயற்றிலே இருக்கிற நம்ம பிள்ளைக்கு

  

வேனும்டா, இதை குடிச்சுக்கோ."

  

அவள் குழைந்தைக்கு என்று கூறியவுடன். அதை எந்த மறுப்பும் கூறாமல் குடித்தாள். பிறகு,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.