மற்றவர்களுக்கும் கொடுத்தான் வந்திருந்த வேலை ஆள்.
அம்மா, வேண்டாம் என்று கூறினார். ஆனால், மாதவன் அவர் கையில் திணித்தான்.
அவர் வெட்கப்பட்டுக் கொண்டு, அவனிடமிருந்து வாங்கிக் கொண்டார். அதை பார்த்த மானசா மெல்லிய புன்னகையோடு அம்மாவை அணைத்துக் கொண்டாள்.
"அம்மா, அப்பா இனி சரி ஆகிடுவார், கவலைப் படாதே அம்மா."
" சரி மானசா. "
" கார்த்திக், நீ ராத்திரி இங்கே இருக்கியா, அம்மாவை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்?"
"சரி அக்கா, நான் இங்கே இருக்கேன். நீ அம்மாவை கூட்டிட்டு போ."
" நீ கூட இப்போ கிளம்பு மானசா, வயிற்று பிள்ளை ரொம்ப நேரமா ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டாம் செல்லம், நீ கிளம்பு."
" கார்த்திக் நீ எங்களோட வா, கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுத்துக் கொண்டு திரும்பி வந்துடலாம். உன்னைக் கொண்டு விட்டிவிட்டு அம்மாவைக் கூட்டிக் கொண்டு போறேன்." என்றாள் மானசா."
மாதவனும், "மானசா சொல்வதுதான் சரி, நீயும் இப்போ எங்களோட வா கார்த்திக், ராத்திரி சரியாக தூங்கியிருக்க மாட்டாய், வா கிளம்பு" என்றவுடன், கார்த்திக் தன் அம்மாவைப் பார்க்க,
ஆம்மண்டா செல்லம், நீ மானசா கூட போயிட்டு வா, நா இங்க பார்த்துக்கறேன், ராத்திரி நீ வந்தவுடன் அவங்களோட போயிக்கிறேன்."
"சரி அப்பா எழுந்தவுடனே போன் பண்ணு எங்களுக்கு "என்றான் கார்த்திக்.
"சரிடா நீ போய் நல்ல உறங்கிட்டு வா!"