தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 44 - பிந்து வினோத்
மனோஜ் தன்னுடைய குழப்பத்தைக் காட்டிக் கொள்ளாமலே,
“இதென்னம்மா கேள்வி, நீங்க இல்லாம வேற யாரு? மஞ்சு தனியா இருக்கா... நீங்க வந்தா அவளுக்கு ஈஸியா இருக்குமே...” என்றான்.
“மஞ்சுவுக்கு உதவியா இருக்கும் எனக்குப் புரியுது... ஆனால் நான் வரது எல்லாம் நடக்குறது கிடையாது மனோஜ். இருபத்தி நாலு மணி நேரம் ஃப்ளைட்ல வரது எல்லாம் எனக்கு ஒத்து வராது. மஞ்சுவோட அம்மா கிட்ட கேட்டீயா?? நான் வரது விட அவங்க வந்தா தான் சரியா இருக்கும்...”
மனோஜ் அவனின் அருகே அமர்ந்திருந்த மஞ்சுவை பார்த்தான். அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மஞ்சு இரண்டு விரல்களை காண்பித்து கணவனுக்கு செய்தி சொன்னாள்.
புரிந்துக் கொண்டவனாக,
“நான் இன்னும் அவங்களை கேட்கலை ம்மா... பேசாம இரண்டுப் பேரும் வரீங்களா?? ட்ராவல் டைம்லேயும் துணை இருக்கும்... இங்கே வந்தப்புறமும் வசதியா இருக்கும்???” என்றான்.
பதில் சொல்ல சில வினாடிகள் அவகாசம் எடுத்துக் கொண்ட நிர்மலா,
“எனக்கும் வரணும்னு தான் ஆசை மனோஜ். ஆனால் எனக்கு ட்ராவல், வெளிநாடு எல்லாம் சரியா இருக்காது. அந்த ஊரு குளிர் எனக்கு சரிபட்டு வராது. நீ பத்மா கிட்ட கேளு. நானும் அவங்க கிட்ட பேசுறேன்,” என்றாள்.
தொடர்ந்து சில நிமிடங்கள் அம்மாவிடம் மற்ற விஷயங்கள் பேசிவிட்டு போனை கீழே வைத்ததும் மஞ்சுவை கேள்வியாகப் பார்த்தான் மனோஜ்.
“என் அம்மா வருவாங்களான்னு சந்தேகம் தான் மனோஜ்...” என்றாள் மஞ்சு.
“நீ கூப்பிடு pbs... நம்ம பாப்பா உங்க வீட்டுல முதல் குழந்தை... ஆன்ட்டி கட்டாயம்