(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

சொன்னது அவளை புண் படுத்தியது.

  

அதைக் காட்டிக் கொள்ளாமல், “ஞாபகம் இருக்கு ஆதி,” என மட்டும் சொன்னாள்.

  

“குட்! இப்போ வேற டாபிக்ஸ் யோசிக்கலாம். உனக்கு டாப்பிக் ஏதாவது மனசுல இருந்தாலும் சொல்லு.”

  

“நான் ஒரே ஒரு ஐடியா தான் யோசிச்சு வச்சிருந்தேன். சொசைட்டிக்கு இம்பாக்ட் கொடுக்குற மாதிரி இருக்கட்டும்னு கிளைமேட் சேன்ஜ் மெஷர்மென்ட் செய்யலாம்ன்னு யோசிச்சேன். அன்டார்டிக்கால பனி உருகுது, டெம்ப்ரேச்சர் அதிகமாகுதுன்னு எல்லாம் சொல்வதை விட, எல்லோருக்கும் புரியுற மாதிரி டெக்னாலஜி துணையோட செய்யலாம்னு நினைச்சேன்.”

  

அக்ஷரா விளக்கம் கொடுக்க கொடுக்க, ஆதித்யா விழிகளை விரித்தான்.

  

“அருமையான ஐடியாவா இருக்கு அக்ஷரா. இதுவும் ஒரு சோஷியல் இம்பாக்ட் கொடுக்குற ஐடியா. இன்றைய காலத்துக்கு தேவையான ஐடியாவும் கூட!”

  

ஆதித்யாவின் பாராட்டு அக்ஷ்ராவிற்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.

  

“ஆனால் இதுல லாபம்னு என்ன வரும் ஆதி? பிஸ்னஸ் ஐடியா ப்ரொபோஸ் செய்யும் போது லாபத்தையும் யோசிக்கனும் தானே?”

  

“நாம ஏதாவது சேர்க்கலாம். இந்த ஐடியாவே எடுத்துக்கலாம்!” என்று ஆதித்யா சொன்னப்போதும் அக்ஷ்ராவிற்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. அதற்கு மாறாக, இது தோல்வியை தான கொடுக்கும் என்ற எண்ணம் தான் ஏற்பட்டது.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.