“சாரி...” என்று மனோஜ் சொல்லவும்,
“இட்ஸ் ஓகே மனோஜ்... எப்படி இருக்காங்க உங்க ஒய்ஃப்? அவங்க கிட்ட தானே பேசிட்டு வந்தீங்க?” என்று விசாரித்தார் சேஷாத்ரி.
அவர் சரியாக கண்டுப்பிடித்து விட்டதில் மனோஜின் முகத்தில் மெல்லிய “பாயிஷ்” வெட்கம் கலந்த அசட்டு சிரிப்பு வந்துப் போனது...
“நல்லா இருக்கா சேஷா...” என்றான்.
“முதல் குழந்தை ஆச்சே டென்ஷனா தான் இருக்கும்... நானும் அப்படி தான் இருந்தேன்...” என்று சேஷாத்ரி சொல்ல, அவர் அருகே இருந்த கமலக்கண்ணன்,
“ஒ, பேபி எக்ஸ்பெக்ட் செய்றீங்களா, மனோஜ்? கங்கிராட்ஸ்... எப்போ ட்யூ டேட்?” என்று விசாரித்தான்.
“இன்னும் 2.5 மாசம் இருக்கு கமல்...” என்ற மனோஜின் கண்கள் தானாக லேப்டாப்பில் தெரிந்த தேதியில் பதிந்தது...
அவனையும் அறியாமல் வயிற்றில் எதோ கலக்கியது!
“என்ன குழந்தை? பையனா பொண்ணா???”
“நாங்க தெரிஞ்சுக்க வேண்டாம்னு வச்சிருக்கோம்... குழந்தை பிறந்தப்புறம் தெரிஞ்சா போதும்...”
“யா... அதுவும் ஒரு தனி எக்ஸ்பீரியன்ஸ் தான்... ஊருல இருந்து யாரு வந்திருக்காங்க? உங்க மதரா, மதர்-இன்-லா’வா?”
கமலக்கண்ணனின் அடுத்த கேள்விக்கு மறுப்பாக தலை அசைத்தான் மனோஜ்.