இப்போது அமுதா வீட்டில் மஞ்சுவை தங்க வைப்பது பற்றி பேச மனம் வராது,
“நாம இந்த வீகென்ட் வர்ஜினியா போகலாமா pbs? அமுதா வீட்டுக்கு??” என்று மட்டும் சொன்னான்...
“அம்மு வீட்டுக்கா? போகலாமே...” என்றாள் மஞ்சு துள்ளாத குறையாக.
அவளின் மகிழ்ச்சி மனோஜிற்கு சரியாக தான் செய்கிறோம் என்ற உணர்வைக் கொடுத்தது...
ஆனாலும்,
“இப்போ எதுக்கு மனோஜ் அங்கே போறோம்??” என்று மஞ்சு கேட்டப் போதும், உண்மையை சொல்லாமல்,
“சும்மா தான்...” என்றான்.
வித்தியாசமாக பார்த்தாலும், மஞ்சு சந்தோஷமாகவே அந்த பயணத்தை எடுத்துக் கொண்டாள்.
“சரி, நானே எல்லாம் பேக் செய்றேன்... எப்போ கிளம்புறோம்? ஃப்ரைடே நைட்டா, சாட்டர்டே காலையிலேயா??”
“ப்ரைடே ஈவ்னிங் கிளம்பிடலாம்... ஆனால் நீ பேக் செய்ய வேண்டாம்... நான் செய்றேன்...”
“மனோஜ்...!!!”
“pbs!!! நான் சொல்றதை நீ கேட்கனும்...”
“ப்ச்... என்னை ரொம்ப பேம்பர் செய்றீங்க...” என்று சொல்லி கணவனின் கன்னத்தில் அன்புடன் முத்தம் பதித்தாள் மஞ்சு...