" அச்சா, நீங்களா? எப்பவும், எதிலும் நம்பிக்கையை விட்டு விட மாட்டீங்களே, இப்போ எப்படி, அச்சா?"
" என்னோட ஸ்டிரந்த்தே உன் அம்மைதான் ஆனந்த், அவள் இப்படி படுத்து இருக்கா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு." என்று குலுங்கி அழுதார் .
ஆனந்த் பயந்தான். என்ன இது அச்சன் இவ்வளவு பயப்படுகிறார். அப்போ, அம்மை ரொம்ப சீரியசோ? என்று அவனும் பயந்தான்.
" டாடி, அம்மையை யு எஸ் அழைச்சுண்டு போகலாமா? இல்லை அங்கிருந்து டாக்டரை இங்க கூப்பிடலாமா? " என்று கேட்டான்.
" ஞான் எல்லா டாக்டரிடம் சோதிச்சு மோனே, ஓன்னும் பிரியோசனம் இல்லை என்று டாக்டர், பரைஞ்சாச்சு."
" அது எப்படி சாத்தியம்? மெடிக்கல் சயன்ஸ் எத்தரை அட்வான்ஸ் ஆயிட்டு அச்சா, எந்து பரையரது?"
" இல்லைடா ஆனந்த், அதெல்லாம் சரிடா, நம்ம டாக்டர், ரெண்டு, மூணு டாக்டர்கிட்ட சம்சாரிச்சாச்சு, லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் எல்லா ஸ்பெஷலிஸ்ட்கிட்டேயும் பேசியாச்சு, இங்கே கொடுக்கற டிரீர்மெண்ட் எல்லாம் சரியாயிட்டு உண்டு."
“சரி பேடிக்க வேண்டா, அச்சா, எல்லாம் சரியாகிடும்."
" சரி ஆகனும்டா மோனே, அவளுக்கு சரி ஆகனும். நிண்ட அம்மே மரிச்சா ( இறந்தால்), ஞானும் அவளோடவே மரிச்சு போகும்." என்று, கதறினான்.
" ஐயோ! அச்சா, என்ன ஆச்சு? நீங்க எத்தரை தைரியமாயிட்டு ஆள் … எந்து ஆச்சு, அச்சா? அம்மை சரியாயிடுவா, நிங்களுக்கு எந்த விசாரமும் வேண்டா.." என்று, ஆனந்தத், தன்