“அடடா!!! இப்போவே பயமா தான் இருக்கு... எங்க கல்யாணம் பத்தி கேட்டீங்களே, அது ரொம்ப அவசரமா நடந்தது...”
“ம்ம்ம்ம்.... எனக்குத் தெரியும்...”
கேள்வியுடன் பவித்ராவை பார்த்தாள் உமா.
“உங்க ப்ரதர்-இன்-லா பாரதி கிட்ட சொன்னதை வச்சு நான் தெரிஞ்சுக்கிட்டது தான்...” என்று பவித்ரா விளக்கம் கொடுத்தாள்.
“ஓ! விவேக் இதை எல்லாம் வேற பாரதி கிட்ட சொன்னாரா?”
“ம்ம்ம்ம்... ஆமாம்...!! மது மேல உங்க கணவர் போலவே விவேக்கிற்கும் ரொம்ப அன்பு இல்லையா?“
“ஆமாம், பவித்ரா... மது இவங்க எல்லோருக்கும் ஒரு ராணி மாதிரி தான்... அவளுக்காக எல்லோரும் என்ன வேணும்னாலும் செய்வாங்க... மதுவும் ரொம்ப நல்லப் பொண்ணு... கொஞ்சம் அப்பாவி... இனி, விவேக்கிற்கு வரப் போகும் வைஃப்பும் அவளைப் புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்...”
“புரியுது உமா... விவேக் மதுவுக்காக பாரதி கிட்ட ப்ரொபோஸ் பண்ணும் போது இது கூட புரியாதா என்ன...”
சற்றே நெகிழ்ந்தக் குரலில் பவித்ரா சொல்வதைக் கேட்டு உமா முதலில் திடுக்கிட்டாள். ஆனால், உடனேயே அந்த செய்தியின் அர்த்தம் புரியவும் மிகவும் ஆச்சர்யப் பட்டாள்!!!
“நீங்க சொல்றது நிஜமா பவித்ரா?” என்றாள், அது குரலிலும் பிரதிபலிக்க.
எதையோ யோசித்தப் படி நின்றிருந்த பவித்ராவிற்கு, உமாவின் கேள்வியைப் கேட்டப் பின்