“பாரதி தான் பேசினா... பிரபுவோட அறுவை தாங்க முடியலையாம்... எஸ்கேப் ஆக ஹெல்ப் பண்ண சொல்றாள்... சரி, நான் கிளம்புறேன் உமா... ஜூஸ் மற்றும் ஸ்நேக்ஸ்க்கு ரொம்ப நன்றி... நான் கிளம்புறேங்க...” என்று சொல்லி எழுந்துக் கொண்டாள்...
“என்ன இது பவித்ரா... இதுக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு... உங்களை சந்திச்சது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்...”
“எனக்கும் கூட சந்தோஷம் தான்...!!! சரிங்க, நான் கிளம்புறேன்... வரேன் சார்... ரொம்ப தேங்க்ஸ்...” என்று நன்றி சொல்லி பவித்ரா அந்தப் பக்கம் செல்லவும்,
“என்ன உமா? என்ன நடக்குது இங்கே? என்னை வெளியே வான்னு கூட்டிட்டு வந்துட்டு இப்படி நீ உட்கார்ந்து கதைப் பேசிட்டு இருக்க?” என்று கேள்விகளை மனைவியிடம் அடுக்கினான் நிரஞ்சன்.
“விஷயம் இருக்குங்க...!!! இதைப் பத்தி நாம பொறுமையா பேசுவோம்.. இப்போ வாங்க, நாம கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போகலாம்...” என்றாள் உமா!
தொடரும்...