"சரி, அப்படியாவது உங்களுக்குப் புரியட்டுமேன்னு தான்..."
"ஓ, அப்போ நீங்க சொல்றது எனக்கு புரிய மாட்டேங்குதுன்னு சொல்றீங்க?"
"அப்படி இல்லை... இப்படி சொன்னால் உங்களுக்கு சுலபமா புரியும்னு நினைச்சேன்..."
இருவர் முகத்திலும் இப்போது புன்முறுவல் தோன்றி இருந்தது. அர்த்தமில்லாத பேச்சுக்கள் தான்... ஆனால் ஏனோ இருவருக்கும் இதுப் போல் பேசுவது இனிமையாக இருந்தது.
"சரிங்க பாரதி மேடம், உங்க கிட்ட நான் ஜெயிக்க முடியுமா?"
"தெரிஞ்சா சரி தான்..."
"அதே தான், உங்களுக்கும் தெரிஞ்சா சரி தான்...!!!"
அதை சொல்லும் போது விவேக் பாரதியின் கண்களை நேராகப் பார்த்து சொன்னான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று தெளிவாகப் புரியாமல் குழம்பினாள் பாரதி.
அதற்குள்,
"என் சோக கதையை உங்கக் கிட்ட சொல்லி புலம்ப தான் பாரதி வந்தேன்... நீங்க கேட்க ரெடின்னா சொல்லுங்க..." என்று பேச்சைத் தொடர்ந்தான் விவேக்...
பாரதியும் தன் குழப்பத்தை மறந்து,
"சோக கதையா? அது என்ன?" என்று வினவினாள்!
"வேற என்ன, என்னை எந்தப் பொண்ணுக்கும் பிடிக்க மாட்டேங்குது... அது ஏன் தான் புரியலை..."