(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"அப்புறம் ஏன் இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்குறீங்க? மே பீ, ஷி டஸ்ன்ட் டிசர்வ் யூ..."

  

"...."

  

"இந்த மாதிரி கல்யாணப் பேச்சு வரது, தட்டிப் போறது எல்லாம் நம்ம ஊரில சாதாரண விஷயம் தானே?"

  

"அது என்னவோ சரி தான்... நீங்க சொல்லும் போது ரொம்ப சாதாரணமா தான் தோணுது..."

  

"இது என்ன கிண்டலா?"

  

"ச்சே ச்சே இல்லை பாரதி. எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. ஏன் என்னோட அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, மது, எல்லோருமே எனக்கு நல்ல ஃபிரெண்ட்ஸ் தான்.... ஆனால் ஏனோ இந்த விஷயம் அவங்க கிட்டப் பேசணும்னு எனக்குத் தோணலை... அவங்களுக்கு புரியுமான்னும் தெரியலை, அது தான் உங்க கிட்ட சும்மா பேசலாம்னு வந்தேன்..."

  

விவேக் சொன்னதைக் கேட்டு மனதிற்கு இதமாக இருந்தப் போதும், அதை காட்டாது,

  

"ஏன், எனக்கு தான் இதில் எக்ஸ்பீரியன்ஸ்ன்னு நினைச்சீங்களோ?" என்றாள் பாரதி.

  

"திரும்ப இந்த மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்களா? உங்களுக்கு இதுப் பிடிக்கலைன்னு புரியுது, சாரி, தெரியாமல் உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோங்க!" என்றான் விவேக் பட்டென்று!

  

அவளே எதிர்பாராதவிதமாக விவேக்கின் இந்த சின்னக் கோபம் பாரதியை பெரிதும் பாதித்தது!

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.