கொண்டு திரும்பி நடந்தாள் சௌந்தர்யா.
அவனின் உதட்டின் மேலிருந்த மீசையும், அவளை விட சற்றே அதிகமாக இருந்த அவனின் உயரமும் தான் அவளின் கருத்தில் பட்டிருந்தது...
“எனக்கு அந்த கருப்பு திராட்சை ஒரு கிலோ கொடுங்க...” என்ற அவனின் குரல் பின்னிருந்து அவளின் காதில் விழுந்தது...
அவள் வாங்கிய அதே திராட்சையை அவனும் வாங்குகிறானா? என்னவென்று புரியாத விதத்தில் அவளுக்கு மனதினுள் மெல்லிய தென்றல் வீசியதுப் போல் குளிர்ந்தது!
மனதில் ஓடிய பழைய நினைவுகளினால் மலர்ந்திருந்த முகத்துடன் தோழிகளுடன் இப்போது அருவி அருகே தோழிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாள் சௌந்தர்யா...
சௌந்தர்யா எப்போதுமே அழகு தான்... இப்போது இன்னும் அழகாக தெரிந்தாள்!
“ஹேய் சௌ? என்னடி முகம் எல்லாம் சிவந்திருக்கு? உடம்பு எதாவது சரி இல்லையா?”
சுபாஷினி சொன்னதைக் கேட்டு மற்றவர்களும் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தனர்.
அருகே வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்த மீனா,
“சூடா இல்லை! என்னாச்சு உனக்கு?” என்றாள் கேள்வியாக.
‘அவனை’ப் பற்றி நினைத்ததில் கன்னங்கள் சூடானப் போதே இதை உணர்ந்திருக்க வேண்டும்... அதென்ன அவனை பற்றிய நினைவிலேயே கன்னம் சிவப்பது?
சௌந்தர்யா இதெல்லாம் உனக்கு நல்லதில்லை!
தனக்குத் தானே மனதினுள் அறிவுரை சொல்லி விட்டு,