தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 10 - சசிரேகா
மறுநாள் காலை பொழுது விடிந்தது. வழக்கம் போலவே சக்தி விடியற்காலையிலேயே கண்விழித்தாள், அவளுக்கு வழக்கம்தானே, அவ்வாறே உறக்கம் கலைந்து எழுந்து பார்க்க அவளை பாதி அணைத்தவாறு ஜீவா உறங்கிக் கொண்டிருந்தான். அதைப் பற்றி சிறிதும் கவலையின்றி இயல்பாக அவனை தள்ளி படுக்க வைத்துவிட்டு எழுந்து குளிக்கச் சென்றாள். தனது உடைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அறைக்கதவை திறந்துக் கொண்டு வெளியேற வீடே உறங்கிக் கொண்டிருந்தது. வந்திருந்த சொந்தங்கள் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள், அவர்களைத் தொல்லை செய்யாமல் நிதானமாக நடை நடந்து பின் வாசலுக்குச் சென்றாள், கொல்லையில் கிணறு இருக்கவே பக்கத்தில் விறகடுப்பு இருந்தது, சற
...
This story is now available on Chillzee KiMo.
...
் உடனே குளிக்கச் சென்றாள், குளித்து முடித்து அவளது உடைகளை அவளே துவைத்து ஆறவைத்து காயவைத்து விட்டு பறித்து வைத்த பூக்களை அள்ளி எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய எதிர்பட்டார் சாந்தி.