(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சொல்லி விளக்கம் சொன்ன போது தான் எனக்கே அப்படியும் இருக்குமோன்னு தோணிச்சு... மற்ற படி நானே இப்படி எல்லாம் யோசித்தது இல்லை... அதனால தான் ஹாஸ்பிட்டல் லேயவுட் விஷயத்தைக் கூட அத்தையே முழுசா கவனிக்கட்டும்னு சொன்னேன்..." என்று உண்மையை சொன்னாள் கீதா.

  

"ஓ!" என்றான் சஞ்சீவ் யோசனையுடன்!  

  

சிறிது வினாடி அமைதிக்கு பின் சஞ்சீவே தொடர்ந்தான்.

  

"இன்னைக்கு இந்து கிட்ட பேசினதிலே இது ஒரு நல்ல விஷயம்ன்னா, இன்னொன்று அவங்க என்னை மீட் பண்ணனும்னு காலையிலே தான் நினைச்சேன்னு சொன்னது... எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்..."

  

சஞ்சீவ் பேசிக் கொண்டே போக, ஸ்டவ் பக்கம் திரும்பி நின்று சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த கீதா நிஜமாகவே திகைத்து தான் போனாள். இந்து இதைப் பற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லையே...??!! பொதுவாக இந்து அவளிடம் எதையும் சொல்லாமல் மறைக்க மாட்டாளே! சிந்தனைக்கு நடுவே சஞ்சீவ் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது புரியவும், அதை கவனித்தாள் கீதா.

  

"... நான் எல்லாம் பெரிய தப்பே செய்தால் கூட மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன்... இவங்கப் பாருங்க, கொஞ்சம் மூட் அவுட்டாக இருந்தேன் அதனால தான் பேச முடியலைன்னு சாரி சொன்னதோட விளக்கம் வேற கொடுக்குறாங்க..."

  

முழுவதுமாக கேட்காவிட்டாலும், கீதாவிற்கு அவன் சொல்வது புரிந்தது!

   

"அது சரி! எதனால மூட் அவுட்டுன்னு சொன்னாங்களா மேடம்?" என்று சஞ்சீவிடம் விசாரித்தாள்.

  

"சொன்னாங்களே... அன்னைக்கு உங்க இன்னொரு ஃபிரெண்ட் வீணா ஏதோ சொன்னாங்களாம்... அப்புறம், என்னை அன்னைக்கு interior decoratorன்னு நினைச்சு பேசின குழப்பம் அப்படின்னு சொன்னாங்க...."

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.