"உங்க தம்பி இன்னைக்கு தான் போதி மர நிழலில் உட்கார்ந்து எழுந்து வந்திருக்கார்...." என்றாள்.
ராஜீவிடமும் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த ஹாஸ்பிட்டல் விஷயத்தைப் பற்றி சொன்ன சஞ்சீவ், அண்ணன் கொடுத்த யோசனைகளையும் குறித்துக் கொண்டான். தம்பியிடம் சிறிது நேரம் பேசி விட்டு, உடை மாற்றி உணவு அருந்த வருவதாக சொல்லி விட்டு ராஜீவ் எழுந்து சென்றான்.
சொன்னபடியே சில நிமிடங்களில் திரும்பி வந்தவன், மற்றவர்கள் தனக்காக உணவறையில் காத்திருப்பதை உணர்ந்து அங்கே சென்றான்.
"சஞ்சீவ், எவ்வளவு சொல்லி அனுப்பினேன்? நீ அந்த கவரை இந்து கிட்ட கொடுக்கலையா?" என்று தம்பியிடம் விசாரித்தான்.
கீதா பரிமாறிக் கொண்டிருந்த சப்பாத்தியை ஒரு பிடி பிடிக்க தயாராகி கொண்டிருந்த சஞ்சீவ், அண்ணனின் கேள்வியில் சிறிது திடுக்கிட்டான்!!!
தொடரும்...