(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

11. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

ஞ்சீவ் தலையை அசைத்தான்...

   

"ம்ம்ம்... காஃபி டே போறது என் ஐடியா தான்... இப்போ தானே புரியுது இந்து உடனே சரின்னு சொன்ன ரகசியம்.... ச்சே.. இந்து கிட்டப் பேசினது எல்லாம் உங்க கிட்ட சொல்லி ஷேர் பண்ணலாம்னு வந்தேன்... இப்படி புஸ்ன்னு போயிடுச்சே...." என்றான் சஞ்சீவ் ஏமாற்றத்துடன்!

  

கீதா புன்னகைப் புரிந்தாள்.

   

"இதுக்கு ஏன் சஞ்சீவ் இப்படி ஃபீல் பண்றீங்க... நான் என்ன நீங்க சொல்றதைக் கேட்க மாட்டேன்னு சொன்னேனா என்ன? சொல்லுங்க எப்படி போச்சு உங்க டைம்?"

  

"நல்ல ஃபிரென்ட்ஸ் தான் நீங்க இரண்டுப் பேரும்... இதையே தான் அவங்களும் கேட்டாங்க... "

  

மீண்டும் புன்னகைத்த கீதா,

  

"பின்ன சும்மாவா, நாங்க இவ்வளவு வருஷமா தோழிகளா இருக்கிறது? நீங்க சொல்லுங்க நான் இந்து என் கிட்டே எதுவும் சொல்லவே இல்லைன்னு நினைச்சுக்கிறேன்..." என்றாள்.

  

"போங்க அண்ணி... நீங்க சொன்னதை தானே அவங்க என் கிட்டே அப்படியே ஒப்பிச்சாங்க. அதை வேற நான் உங்க கிட்ட திரும்ப சொல்லனுமா என்ன?"

  

சஞ்சீவின் குரல் மிகுந்த ஏமாற்றத்துடன் ஒலித்தது.

  

"இல்லை சஞ்சீவ், பிசினஸ் விஷயமா பேசினது எல்லாம் கிட்டத்தட்ட நான் இந்து கிட்ட சொனது தான். ஆனால், உங்க அம்மா பத்தி இந்து சொன்னது எல்லாம் நான் சொல்லி அவள் சொல்லலை..."

  

அவன் ஆச்சர்யமாக பார்க்கவும்,

  

"ஆமாம் சஞ்சீவ், நிஜமாக தான் சொல்றேன்... இந்து என் கிட்டே உன் கிட்ட பேசினது எல்லாம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.