கீதா தன்னிடம் மரியாதை பன்மையில் பேசுவதை சஞ்சீவ் அப்போது தான் கவனித்தான்!
"திரும்ப நீங்க வாங்க'க்கு போயிட்டீங்களே, அண்ணி... சரி அது அப்புறம்... இது என்ன தெரியுமா? அவங்க என்னோட மில்லியன் டாலர் சந்தேகத்தை தீர்த்து வச்சுட்டாங்க...."
கீதா என்ன என்பதை போல் பார்க்கவும், சஞ்சீவே விளக்கம் கொடுத்தான்.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அப்படின்னு சொல்வாங்களே அது எப்படி ஃபர்ஸ்ட் சைட்லேயே காதல் வரும்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.... அண்ணன் கிட்ட கேட்டால் அவனும் எதோ சொதப்பலா தான் பதில் சொன்னான்...."
இது இந்துவின் மூலம் கீதா ஏற்கனவே அறிந்த விஷயம் தான், ஆனாலும் சஞ்சீவிற்க்காக அதைக் காட்டாது,
"ரொம்ப முக்கியமான சந்தேகம்...." என்றாள்.
"ஆமாம் அண்ணி... பின்ன நம்ம பாரம்பரியம் படி ஒரே ஒருத் தடவை பொண்ணும் பையனும் பார்த்து தானே கல்யாணம் முடிவு செய்றாங்க? அது எப்படி ஒரு தடவை பார்த்தவுடனேயே அவங்களுக்குப் பிடிக்குது அப்படின்னு எனக்கு சந்தேகம்...."
"ரொம்ப நல்ல சந்தேகம் தான், சார்... அதுக்கு இந்து என்ன சொன்னாள்?"
இந்து சொன்னதை சொன்ன சஞ்சீவ்,
"எப்பவும் பொண்ணு பார்க்க போறதுக்கு முன்னாடி ஒருத்தர் அந்த பொண்ணைப் பத்தி பையனுக்கும், அந்த பையனைப் பத்தி பொண்ணுக்கும் சொல்வாங்க... அது பாதி பொய்யாகவும் இருக்கலாம் அது வேற விஷயம்... ஆனால், அந்த எதிர்ப்பார்ப்போட போய் பார்த்து அவங்க frequencyக்கு ஒத்துப் போனால் சரின்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்குறாங்க... அது தானே?"
"ம்ம்ம்...." என்று யோசித்த கீதா,