"இவ்வளவு சொன்ன இந்து இன்னும் ஒன்னு சொல்லி இருக்கனுமே? " என்றாள்!
"என்ன?"
"இந்த பூமியில ராமர் சீதை மாதிரி யாரவது இருக்காங்க, இல்ல இருந்தாங்க அப்படின்னா, அது அவங்க அம்மா அப்பா தான்னு சொல்லி இருப்பாளே..."
"இல்லை அண்ணி, அதை அவங்க சொல்லலை... ஆனால், அவங்களுக்கு அவங்க அம்மா அப்பா மேல ரொம்ப பாசம்ல?"
"ஆமாம், பின்ன அவ ஒரே பொண்ணு இல்லையா? ரொம்ப செல்லம், பாசம் எல்லாம்..."
"பாவம் இந்து கல்யாணம் பண்ணிட்டுப் போன பிறகு அவங்க அம்மா ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுவாங்கல?"
பெருமூச்சொன்றை பதிலாய் தந்த கீதா,
"இதையே நினைச்சு தானே அந்த பைத்தியக்காரப் பொண்ணு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காள்... சரி, வாங்க நாம ஹாலுக்கே போகலாம்... அத்தை அங்கே தனியா இருப்பாங்க..... டின்னருக்கு எல்லாம் ரெடியா இருக்கு... உங்க அண்ணன் வந்த உடனே சாப்பிடலாம்..." என்றாள்!
*****
ராஜீவ் அன்று வீடு வந்தப் போது அவன் அம்மாவும், தம்பியும் மும்முரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். எப்போதும் போல் ஏதோ விளையாட்டு விஷயமாக இருக்கும் என்று எண்ணிய படி சோபாவில் அமர்ந்து கவனித்தவன், அவர்கள் ஹாஸ்பிட்டல் பற்றி பேசுவதை உணர்ந்து ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போனான். அவனின் முகத்தைப் பார்த்து சிரித்த கீதா,