சஞ்சீவ் எந்த பந்தாவும் செய்யாது அமரவும், உள்ளே சென்று கனகாவிடம், அவனுக்கு பழ ரசம் தயார் செய்ய சொன்னாள் இந்து. ஃபோனின் மறுபுறம் பேசுவதைக் கேட்டப்படி யார் என்று சைகையால் கேட்ட அர்ச்சனாவிடம், தணிந்தக் குரலில், ராஜீவின் தம்பி வந்திருப்பதை சொன்னாள்.
பின் மீண்டும் ஹாலுக்கு வந்து,சஞ்சீவ் அமர்ந்திருந்த ஷோஃபாவின் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
"Breakfast சாப்பிட்டாச்சா? சாப்பிடுறீங்களா?"
இந்துவின் கேள்விக்கு பதில் சொல்லாது அவளையே பார்த்திருந்தான் சஞ்சீவ். அந்த பார்வை ஏதோ செய்தப் போதும், அதைக் காட்டி கொள்ளாது,
"கேள்வி கேட்டால், பதில் சொல்லனும் மிஸ்டர் சஞ்சீவ்..." என்றாள் இந்து!
"ம்ம்ம்ம்... கேள்விக்கு மட்டும் இல்லை, விஷ் பண்ணினாலும் திரும்ப விஷ் பண்ணலாம் இல்லை ஒரு தேங்க்ஸ் சொல்லலாம், இந்து மேடம்..."
அவன் எதை சொல்கிறான் என்று புரிந்தவளாய்,
"சாரி, ஆஃபீஸ்க்கு கார்ல போகும் போது உங்க மெசேஜுக்கு ரிப்ளை அனுப்பலாம்னு நினைச்சேன்..." என்றாள் இந்து.
"இதுக்கு எதுக்கு சாரி? நீங்க எப்போதும் என்கிட்டே தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டு சாரி தான் சொல்றீங்க.... சோ, இனி மேல் நமக்குள்ளே ஒரு டீல் வச்சுப்போம்... ஃபிரென்ட்ஸ்குள்ளே சாரி தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் தானே? அதனாலே என்னை உங்க நண்பனா ஏத்துக்கோங்க... அப்போ நீங்க தேங்க்ஸ் சொல்ல மறந்தாலும் பிரச்சனை இல்லை..."
ஃபிரென்ட் மட்டும் போதுமா??? அதை விட இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி தன்னை ஏற்றுக் கொள்ள கேட்டால் என்ன, என்று இந்துவிற்கு தோன்றியது... ஆனாலும் உடனேயே, இது