என்ன பைத்தியக்காரத்தனம் என்று தன்னையே கடிந்தவள்,
"சரி, இதுக்கு மேல உங்களை கெஞ்ச விட்டா நல்லா இருக்காது... சரி போனால் போகுது பிழைச்சுப் போங்க... ஃபிரென்ட் தானே..." என்றாள் புன்னகையுடன்!
"ஆஹா, இந்து மேடத்தின் கருணையே கருணை...!!!"
சஞ்சீவ் அதை சொன்ன தோரணையில், இந்து தன்னையும் மறந்து வாய் விட்டு சிரித்தாள். சஞ்சீவிற்கு பழ ரசம் கொடுக்க வந்த கனகா பல நாட்களுக்கு பின் இந்து மனம் விட்டு சிரிப்பதைக் கண்டு சந்தோஷ பட்டாள். அவள் கொண்டு வந்த பழ ரசத்தை குடித்த சஞ்சீவ்,
"நான் உங்க கிட்ட ஒன்னு கேட்பேன்... கோவிச்சுக்க மாட்டீங்களே...." என்றான்...
"தப்பா எதுவும் கேட்கலைனா நான் ஏன் கோபப் பட போறேன்..."
"ம்ம்ம்... சரி, அப்போ நான் கேட்பது தப்பா சரியான்னு உங்க reaction-அ பார்த்து தான் தெரிஞ்சுக்கனும்... நீங்க எப்போதும் சுரிதார் தான் போடுவீங்களா?"
இந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை!!! அவள் திகைத்துப் பார்க்கவும்...
"இதுவும் உங்களுக்கு அழகா தான் இருக்கு இருந்தாலும் உங்களுக்கு புடவை ரொம்ப அழகா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..." என்றான் சஞ்சீவ்!
இந்துவையும் மீறி, அவள் கன்னங்களில் சூடு ஏறியது. சஞ்சீவின் கண்கள் தன் முகத்திலேயே இருப்பதை உணர்ந்தவள், கஷ்டப் பட்டு முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாத வண்ணம் தன்னை கட்டுப் படுத்தி கொண்டாள். அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவள் யோசிக்கும் போதே,
"வாங்க சஞ்சீவ்..." என்ற அர்ச்சனாவின் குரல் கேட்டது.
அம்மாவின் வருகையால் சஞ்சீவ் கேள்விக்கு பதில் சொல்லாது தப்பி விட்ட