(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அர்ச்சனா, பின் சஞ்சீவிடம்,

  

"அப்புறம் சொல்லுங்க சஞ்சீவ், நீங்க ஏதோ புதிசா பிசினஸ் ஆரம்பிச்சு இருக்கிறதா ராஜீவ் சொன்னான்..." என்றார்.

  

"இது ரொம்ப அநியாயம், ஆன்ட்டி...."

  

அர்ச்சனா ஆச்சர்யமாகப் பார்க்கவும்,

  

"இல்லை, என்னோட அண்ணனை நீ வான்னு பேசுறீங்க என்னை நீங்க வாங்கன்னு சொல்றீங்களே.... இது அநியாயம் இல்லையா?" என்றான் சஞ்சீவ்.

  

"ஓ! இது இந்துவோட அப்பா கிட்ட கத்துக் கிட்ட விஷயம்... இப்படி பேசியே பழக்கம் ஆயிடுச்சு ப்பா...."

  

"ஓஹோ! அப்போ அண்ணி உங்க கிட்ட இருந்து தான் கத்துகிட்டாங்களா? ப்ளீஸ் ஆன்ட்டி, என்னை அண்ணனை கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க..... இது என்னவோ என்னை ரொம்ப அந்நியப் படுத்துற மாதிரி இருக்கு.... ப்ளீஸ்...."

  

"என்னப்பா இதுக்கு எதுக்கு இத்தனை ப்ளீஸ்... உன்னை இனிமேல் டா போட்டே பேசுறேன் போதுமா?"

  

"நீங்க மட்டும் அப்படி பேசினால் ரொம்ப சந்தோஷப் படுவேன், ஆன்ட்டி... சரி ஆன்ட்டி, நான் கிளம்பட்டுமா?"

  

"இருப்பா... ஏதாவது சாப்பிட்டுப் போகலாம்..."

  

"இல்லை ஆன்ட்டி, வீட்டிலேயே சாப்பிட்டு தான் வந்தேன்..." என்று எழுந்தவன், சிறிது தயக்கத்துடன்,

  

"ஏன் ஆன்ட்டி இந்த கவர்ல இருக்கிற பிரசாத்தை உங்களுக்கு தெரியுமா?" என்றுக் கேட்டான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.