"எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை... ஆனால் இந்துவோட அப்பாவிற்கும் பிரசாதோட அப்பாவிற்கும் பிசினஸ் பக்கத்தில நல்ல நட்பு இருந்தது...."
"ஓ! இதை சொல்லலாமான்னு தெரியலை...."
"என்ன விஷயம் சஞ்சீவ், தயங்காம சொல்லு..."
"இல்லை ஆன்ட்டி...கல்யாணம் என்பது ரெண்டு பேர் சந்தோஷமா இருக்க செய்றது தானே? பிரசாத் இந்துவை மீட் பண்ண பல சந்தர்ப்பம் கிடைக்கும்... அப்போ, அவங்க கிட்ட அவர் தன்னோட மனசில இருக்கிறதை சொல்லி இருக்கலாம் தானே? ஒரு வேளை, இந்து அவர் கிட்ட அம்மா கிட்ட பேசுங்கன்னு சொல்லி இருந்தால் இப்படி ஜாதகம் கொடுத்து பார்க்க சொல்றது சரி... அதை விட்டுட்டு ஏன் அவர் இப்படி தலையை சுத்தி மூக்கை தொடனும்? இந்துவின் விருப்பத்தையும் அவர் பெரிசா நினைத்திருந்தால் நேராகவே அவங்க கிட்ட தானே கேட்டிருக்கனும்? ஆனால பிரசாத், அவர் விருப்பத்தை பெரிசா நினைக்கிறதால் தானே, இப்படி உங்க மூலமா இந்துவை approach செய்றார்? கல்யாணம் நிச்சயம் ஆகும் போது சரி, ஆனால் பின்னாடி எதாவது பிரச்சனைன்னு வந்தால் அவர் இந்துவோட விருப்பத்தைக் கேட்டு நடப்பாரா?"
சஞ்சீவ் சொல்வதைக் கேட்டப்படி அவனை யோசனையுடன் பார்த்தார் அர்ச்சனா.
"சாரி ஆன்ட்டி, தப்பா எடுத்துக்காதீங்க ஏதோ மனசுக்கு தோணிச்சு சொன்னேன்..."
"இல்ல சஞ்சீவ், தப்பா எடுத்துக்க என்ன இருக்கு..."
சஞ்சீவ் கிளம்பி சென்ற பின் சில நிமிடங்கள் அர்ச்சனா சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். சஞ்சீவ் கடைசியாக கேட்ட கேள்வி அவர் மனதை சிறிது கலக்கி இருந்தது.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...