அவள் கையில் வைத்திருந்த ரீசைக்கிலபில் பை கீழே விழுந்து, அதில் இருந்த பொருட்கள் அங்கங்கே உருளத் தொடங்கியது.
யார் என்றே பார்க்காமல்,
“சாரிங்க. நீங்க வந்ததை நான் பார்க்கலை” என்று மன்னிப்பு கேட்ட படி கீழே விழுந்திருந்த காய்கறிகளை எடுக்கத் தொடங்கினான் அபினவ்.
“இட்ஸ் ஓகே. நானும் கவனிக்கலை.”
அவளின் குரல்! அது தான் அபினவை அவள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
அவள் கட்டி இருந்த கருநீல கலர் சேலை, அவளின் எழுமிச்சை நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.
குனிந்து காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்ததால் அவளின் 25% முகத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.
ஆனாலும் அந்த 25% முகமே அவனுக்கு பிடித்த நடிகை சமந்தாவை நினைவுப் படுத்தியது.
சப் இன்ஸ்பெக்டர் என்றாலும் இருபத்தி ஏழு வயது இளைஞன் என்பதால் அபினவின் வயசுக் கோளாறு வெளியே எட்டிப் பார்த்தது.
“மாம்! எவ்வளவு நேரம்??”
அவள் பக்கத்தில் வந்து நின்றுக் கேட்ட சிறுவனை அதிர்ச்சியாக பார்த்தான் அபினவ்.
மாம் என்றா அழைத்தான்???!!!!
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்