என அவன் கேட்க கேட்க அவள் மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து நிற்க முயன்று கண்கள் சுழற்றி நிற்க முடியாமல் தடுமாறியவளை உடனே பிடித்து கட்டிலில் உட்கார வைத்தான்.
அவளோ தலையை இரு கையாலும் பிடித்துக் கொண்டாள். அவளது செயலை கண்டவன் அவளுக்கு உதவி செய்ய எண்ணும் நேரத்தில் மறுபடியும் செல்போன் மணி அடிக்கவே கோபமாக போனை எடுத்து கத்தினான்
”ஹலோ”
“டேய் ஏன்டா கத்தற, மணி என்னாச்சி தெரியுமா எங்கடா போன ரூம்ல கூட ஆள் இல்ல” என வெற்றியின் அண்ணன் ரவி திட்டவும்
”இப்ப என்னாச்சி அண்ணா” என பாவமாக கேட்டான்
“அண்ணாவா! அய்யோ அப்போ ஏதோ பிரச்சனையில இருக்கியா, சந்தோஷம் இதப்பாரு மணி இப்பவே 3.20 ஆகுது. 4 மணிக்கு உனக்கு நலுங்கு வைக்கனும் எங்க இருந்தாலும் சரி சீக்கிரமா வீட்டுக்கு வந்து தொலைடா”
“சரி வந்துடறேன் அண்ணா” என பாசமாக சொல்லிவிட்டு போனை வைத்தவன் அவசரமாக தனது சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு அவளைப் பார்த்து நெருங்கி சென்றவன்
”இப்ப நீ உன் பேர் சொல்லலைன்னா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்” என குழந்தை போல அடம்பிடிக்கவும் அவள் திருதிருவென விழித்தவாறே அவனை ஏறிட்டுப் பார்த்து
”விஜயலட்சுமி” என்றாள்
”ஆங் கேட்கலையே என்ன முணுமுணுங்கற சத்தமா சொல்லு”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.