”டேய் என்னடா பேச்சு இது, விடுடா அவள் துணியை”
“முதல்ல அவளை வெளிய விரட்டுங்க, பெரிசா வந்துட்டா என்னை குளிப்பாட்டறதுக்கு” என அவன் துணியை விட்டு கோபமுடன் கத்தவும் செண்பா மிருதுளாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவர் நேராக வெற்றியிடம் வந்து
”பாவம் மிருதுளா அவளோடவே நீ எப்பவும் சண்டைக்கு நில்லு”
“யாரு அவள் பாவமா அம்மா, நீ வேற, அவள் என்கிட்ட எப்படியெல்லாம் நடந்துக்கிறா தெரியுமா, இன்னிக்கு என் கல்யாணம் நின்னுட்டா, அவள் என்னை கல்யாணம் பண்ணிக்கறதா என் முன்னாடியே சொல்றாம்மா”
“பொய் சொன்னது போதும் உட்காரு முதல்ல”
“அம்மா நான் உண்மையை சொல்றேன், அவள் அப்படித்தான் சொன்னா” என கத்தவும் அவனது முதுகில் நான்கு அடி போட்டு அவனை மனையில் அமரவைத்து அவனுக்கு நலுங்கு வைக்க ஆரம்பிக்க
”அம்மா”
“பேசாதடா”
“அம்மா” என முனகினான்
”என்னடா வந்துச்சி இப்ப”
“அம்மா நான் இன்னும் பல் விளக்கலையே”
”ஷ் யப்பா சின்ன குழந்தையையே ரெடி பண்ணிடலாம் உன்னை ரெடி பண்றது கஷ்டம் போடா
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.